Saturday 10 October 2009

நீ, நான், காதல் ????

மேல்வானம் பூப்படையும் மாலைவேளை ,
உனது சைக்கிளை தோழி வீட்டில் விட்டுவிட்டு
என்னோடு டபுள்ஸ் வரும் காதல் மீதான அக்கறை ,
என் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருக்கும் நீ,
நான் செய்யும் சில்மிஷங்களை எதிர்க்கின்ற வெட்கம் ,
கைகோர்த்து காலாறும் நகர சபைப்பூங்கா,
கொப்பரைக் கொண்டுவிட்டு ஒழித்த குளக்கட்டு,
"நம் காதலை வீட்டில் சொல்லப்போறன்" என
பீதியைக்கிளப்பும் உன் குறும்பு ,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தே
மௌனத்திலேயே கழிந்துவிட்ட பொழுதுகள் ,
இதிலே
எதுவுமே நடக்கவில்லை
இவையெல்லாம் கற்பனையிலும் கனவிலும்
வந்து போகும் எதிர்பார்ப்புக்களாய் போனாலும் .........................

உனக்கு சாப்பாடு பரிமாறியபோதில் இடம்பெற்ற முதல் உரையாடல்,
எங்கு போனாலும் உனது வீட்டடியால் அமைத்துக்கொண்ட என் பயணங்கள் ,
உன் அக்காவின் திருமணத்தில்
நான் நிற்கும் புகைப்படத்தில் நீயும் ஒருத்தியாய் ,
முடிவு கேட்டபோது நடந்தேறிய வினோதம்,
அதன் பின்னர் என்னை முறைத்த உன் பார்வை .

போன்ற நிஜங்களால் மனது நிம்மதியாய் ..........

உருகி உருகிக் காதலித்து நான் உருக்குலைந்து போகாவிட்டாலும்
சில நினைவுகள் கொஞ்சம் ஏக்கத்தைத்தர மறுக்கவில்லை.
நான் உன்னவன் என்று நீ எண்ணுமளவுக்கு எதுவுமே நடக்கவில்லை
அதே போல் நீ என்னவள் என்று சொல்லுமளவுக்கு
என்னுடைய சொத்தாகிப்போன வலைப்பதிவின்
கடவுச்சொல்லாய் உன்பெயர் .............

1 comment:

நிலாமதி said...

ஆகா ..........காதல் வந்ததா? கவிதை வடிவில் கதை நன்றாய் இருக்கு.