Wednesday 23 January 2013

பாதுகாப்பு

 அலை பேசி  அழைப்பு அதிகாலை 4.25 க்கு. ஒவ்வொரு வேலை நாட்களிலும் என்னுடைய அலாரத்துக்கு ஐந்து நிமிடம் முதல் என்னை எழுப்பி விடுகின்ற அவளின் அக்கறை. சில நாட்களைத் தவிர கட்டார் உன்னோடுதான்   விடிகிறது. இதை உன்னட்ட சொன்னா சும்மா போங்கோ  புளுகாமல் என்பாய்.  இன்றோடு நாட்டைவிட்டு வந்து ஒரு வருடம் எட்டு மாதம் ஆகுது. வயது 30 வருடம் 2 மாதம். கட்டுமானத் துறையில் Foreman  உத்தியோகம். Gulf Experience இல்லை  என்று சொல்லி இரண்டாயிரம்  ரியால் தரலாம்  எண்டு கொழும்பில ஒரு ஏஜென்ட் மூலமா வந்து. அட எழுப்பி இருந்து ஒவ்வொரு நாளும் நாளை எண்றதும் தொழில ஞாபகப் படுத்திறதும் வேலையாப் போச்சு. அவசரமா  காலைக் கடன்  முடித்து வெளிக்கிட்டு உடுத்தி இரவு   சமைத்து குளிரூட்டியில் இருந்த மீன்கறியை சுட வைக்க நேரமில்லை  ஹோட்பாக்ஸ்ல போட்டுக்கொண்டு  வெளிகிட்டன்.சூடா இருக்காது ருசி மாறாமல் இருக்கும்.  சைட்டுக்கு  பக்கத்தில இருக்கிற பக்காலாவில (கடை) கபூஸ் (ரொட்டி மாதிரி இருக்கும் ) வாங்குவம். காணும் ரண்டு நேரத்துக்கு காலமையில மூண்டு அல்லது நாலு மீன் இறைச்சி எண்டா நாலு  இல்லாட்டி மூன்றுதான். அதே போல மத்தியானத்தில நாலு சராசரி நல்ல கறி எண்டா அஞ்சு பாயும். ஒரு ரியாலுக்கு கிடைக்கிற கபூஸ் தொடந்து சாப்பிட உடம்பு வைக்கிற போலையும் ஒரு உணர்வு. அடுத்த முறை லுளுக்கு (Lulu Hypermarket ) போனா நிறுத்து பாக்கோணும். "போர்மன் ஜி சாய் பீயகா". எங்கட காம்போட இருக்கிற கடையில எண்ட  சைட்ல  வேலை செய்யிற தொழிலாளி ஒருத்தன் கேக்கிறான். "நா தாங்க்ஸ்."

வெளில பஸ் ஆயத்தமா நிக்குது நானும் தொழிலாளிகளும் வெளிக்கிட்டாச்சு. இன்ஜினியர்மாருக்கு தனித்தனியா கார் இருக்கு. பிந்தியும் வரலாம் அவங்கள். உதுக்குத்தான் படிச்சிருக் கோணும் என்ற. இப்ப அதை யோசிச்சு என்ன செய்ற.ஏதோ தொழில்நுட்ப கல்லூரியில் படிச்சிருக்கன் சிவில் துறையில. கல்வி கூட பல நேரங்களில் அதிகார வர்க்கத்தை தோற்றுவிக்கிறதோ என்று கூட எண்ணத் தோன்றும். பஸ் சினையாவ விட்டு வெளியேறி சல்வா ரோட்டை பிடிச்சிட்டுது. இனி டிராப்பிக் இருக்காது. நான் படிப்பு குறைவெண்டதால அப்பிடி நினைக்கிறானோ தெரியல. ஆனா வேற  கொம்பனி கூட்டாளிகள் அதில ஒருத்தன் சர்வயர் மற்றவன் மெட்டீரியல்  டெக்னீசியன். அவங்கள் சொல்லுவாங்கள்  "இங்க எங்கட கொம்பனில படிப்புக்கோ அறிவுக்கோ மரியாதையை இல்லை மச்சான்." கல்வி அதிகாரத்தை உருவாக்கினால் கூட பரவாயில்லை என்றும் நினைப்பதுண்டு  அவங்கட நிலமையை  பாக்கும்போது. இருமை இல்லை எண்டே சொல்ற அளவுக்கு கபில பகுதிகள் (Gray area) வாழ்க்கையில மிச்சம் இருக்குது.


 எது இல்லையோ அதைத் தேடி ஓடிறது மனுசனுக்கான இயல்பு. கொஞ்ச காசுத் தேவை அதுக்காகத்தான் கட்டாருக்கு  வந்தன். வீட்டிலை நானும் தம்பியும் அம்மாவும்தான். அப்பா தவறீட்டார். வேறை சாதிப் பிள்ளை ஒண்டை நான் விரும்ப அம்மா மறுப்பு ஒண்டும் சொல்லாம சம்மதிச்சது. அம்மாக்கு ஏதும் செய்யோணும் அம்மாண்ட பேர்ல கொஞ்ச காசு போடோணும். மற்றது தாலி செய்றதுக்கு கொஞ்ச காசு வேணும் இது இரண்டும்தான்  முக்கிய காரணம். அப்ப அம்மா காதலுக்கு சம்மதிக்காட்டி அம்மாக்கு ஏதும் செய்திருக்க மாட்டனா ? விடை எனக்கு கிடைப்பதில்லை எப்ப கேட்டாலும்  இந்தக் கேள்விக்கு.சாதியப் பற்றி தூக்கிப் பிடிக்காதது புதுசாத்தான் இருந்திச்சு. சாதி எதுக்கு பாக்கிறாங்களோ இல்லையோ யாழ்ப்பாணத்தார் கலியாணம் எண்டா அதுதான் முன்னுக்கு  வைப்பாங்கள். அடுத்தது பொருத்தம். ஒன்பது கிரகம் எண்டு நாங்கள் எப்பவோ கண்டு பிடிச்சிட்டம் எண்டு பழமை பெருமை பேசிற ஆக்கள் அதுக்குள்ளே சூரியனும் இருக்குங்கோ. 

மத்திய கிழக்கு  நாடுகளுக்கு படிச்சு நல்ல உத்தியோகத்துக்கு வார எண்டா வாங்கோ இல்லாட்டி வந்து கஷ்டப்படக்கூடாது. எல்லாருக்கும் சொல்லோனும் எண்டு நினைப்பன்.  ஆனா எவ்வளவு  தூரம் ஆக்கள் நம்புவாங்கள் எண்டு நினைச்சிட்ட்டு நிப்பாட்டீடுவன். பத்து மணித்தியாலம் தொடந்து சைட்ல நிக்கிறம். அரை மணித்தியாலம்தான்  இடைவேளை. காலமை சாப்பாட்டு நேரம்  இல்லை. நிண்ட நிலையில போடறதுதான், 

ம்ம் சைட் வந்தாச்சு. மக்கி மண்.,புழுதி.,க்ச்காவேடர் (Excavator) ஒலி.  கட்டாரில அதிகமா கேட்கிற சத்தம் எண்டா எச்காவடோர்களின் டுக் டுக் தான். இந்த   பீட்டுக்கு பின்னணியா  ஐடெம் சாங்  ஹரிஷ் ஜெயராஜ்ண்ட இசையில போட்டா நல்லா இருக்கும். இப்பிடி கிறுக்குத்தனமா யோசிக்கிற அளவுக்கு இருக்கன்.


இந்த மோட்டர் கிரேடர் எப்ப திரும்பி வந்திச்சு???? போன கிழமை இந்த  மெசிண்ட  சில்லுக்க அகப்பட்டு ஒரு நேபாள தொழிலாளி இறந்துவிட்டான்.  ஒரு நாள் கூட சைட் மூடல. அடுத்த நாள் எல்லாரும் வழமை போல  வேலைக்கு வந்தம். மனிதம் ?? காசு கொட்டும் கட்டுமானத் துறையில் சில கொம்பனிகளுக்கு  கணக்கே இல்லை. அதுக்காக எல்லா இடமும் அப்பிடி இல்லை. தொண்ணூறு சதவீதமான கொம்பனிகள் பாதுகாப்புக்கு முதலிடம்தான், நாங்கள் கவனமா இல்லாட்டிலும் பொறுப்பான உத்தியோகத்தர்களின் நச்சரிப்பு அதிகம்.
 
முகத்துக்கு face cover ஐ அணிகிறேன் Helmet  மாட்டுகிறேன்.  safety glass ஐ . மாட்டுகிறேன். 

எங்களை நேசிக்கிறவங்களுக்கு கவலையை மட்டுமே கொடுத்து விடாமல் இருக்க Safety First .  
    

Monday 29 October 2012

விடுமுறை

விடுமுறை:- match, போதை,  Airtel super Singer Junior 3 Final,மாற்றான், போதை தரும் மீட்டல், உம்சைட்

ஈத் விடுமுறை எனக்கு 3 நாட்கள் சிலருக்கு 5 நாட்கள் எண்டு மன நிலையில் மாற்றங்களை  உருவாக்க கூடிய சூழ்நிலைகளில் மந்தமில்லாமல் நித்திரைக் குறைவோடு.


Match  
கிரிக்கெட்  தொடர் வெற்றி 2-0

போதை 
வாந்தி எடுக்க முதல் இதை உள்ளே எடுக்கும் போது ஆளையாள் நல்லா கழுவுவம்,
Mc 




மாற்றான்
Gulf  Cinema Qatar


காதல் வரும்போது கூட ஒட்டிப் பிறந்ததால் எதிர் காலத்தை பற்றி சிந்திக்காமல் காதலிக்க கூடிய மன நிலையைக் கொண்ட மனிதர்களோடு  நகர்த்த நினைத்தது உலக மயமாதலின் அடையாளப்படுத்துகையோ ? , பாடல்களை நன்றாக படமாக்கி இருக்கிறீர்கள். ருக்வேநியாவில் போய் சூர்யா நீங்கள்  காட்டும் ஹீரோயிசம் நீங்கள் செய்த மாபெரும் பேய்க்கூத்து.  வித்தியாசமான சுவாரஸ்யமான கருவோடு வருகின்ற தமிழ் சினிமா இடைவேளைக்கு முதல்  அநேகமான இயக்குனர்கள் சிறந்த ஒரு பொழுது போக்குத்தனத்தையும் நகைச்சுவை காட்சிகளையும் இடைவேளைக்கு பின்  சீரியஸா கதையை நகர்த்துவதையும் ஒரு மரபாக ஆரம்பித்து விட்டீர்கள். pendriva  தகவல்களை laptop இல மாத்திரம் அல்ல mail இல attach பண்ண மாட்டீங்களோ . தயவு செய்து pendrive ஐ  வச்சு கதையை கொண்டு போறத நிப்பாட்டுங்கோ. நாங்கள் எங்கேயோ நிக்கிறம். கிளைமாக்ஸில் எல்லா வில்லன்களும் வசனம் பேசி உண்மையை ரசிகர்களுக்கு சொன்னால்தான் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புரியும். இதுவும் மரபாப் போச்சு. பாட்டு இல்லாத படங்களை எதிர்பாக்கிறம்  நண்பர்கள்,  நான்இப்பிடி கன  பேர். இசையை வெறுக்கல. பொருத்தமில்லாமல் வேண்டாம் சினிமாவுக்கு இசை. 

Airtel Super Singer Junior 3 Finale 



இறுதிப்போட்டிக்கு  முதல் Airtel Super Singer Junior சுகன்யாவுக்கு கிடைக்கும் எண்டு எதிர் பார்த்தேன் .  சுகன்யா தேர்ந்தெடுத்த அஞ்சலி அஞ்சலி பாட்டு கைவிட்டு விட்டது. ஏனோ சரியாக பாடதது உணர முடிந்தது, அன்றைய போட்டியில் பிரகதிக்கு கிடைக்கும் எண்டு நினைத்தேன்.  எல்லோருடைய performance  இல் அவருடையது பிடித்திருந்தது. ஆஜிதுக்கு ரசிகர்கள் அதிகம். வாழ்த்துக்கள்  தீர்மானிப்பது ரசிகர்களே என்று தான் விளம்பரம். வாழ்த்துக்கள் ஆஜித். உங்கள் ஆரோமலே ரொம்ப பிடிக்கும் , சுகன்யா, பிரகதி  விரைவில் உங்கள் குரலில் நல்ல பாடல்கள் கேட்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது . யாழினி, கௌதம் யாரும் சளைத்தவர்கள் இல்லை .

உம்சைட்
நாங்கள்  உளத்த போகும் கடல். அதுக்குத்தான் இந்த முறையும் இரவில் ,,,,,




 போதை தரும் மீட்டல்

ஞாபகங்கள் நடந்தவற்றை மீள  கொண்டு வரல் போதையால் மாத்திரம் முடிந்து விடுகிறது ஆனால் போதையில் நடந்தவை மறந்தால் கூட.

----------------------------------------------------------------------

உன் மடி மீதாவது உறங்கி அன்பாக ஓரிரண்டு வார்த்தைகள் பேச வேண்டும் என்பது ஏக்கம்.உன்னிடம் அந்த மன நிலையை சொல்லப் போவதில்லை . அன்பை வெளிப் படுத்த சமூக வரையறைகள் ஏற்புடையவை அல்ல . ஆக கற்பனையில் நான் எண்ணுவதை ஒரு தூய்மையில் விழ கூடிய கீறல்களை என் எழுத்துக்கள் தந்து விடக்  கூடும். நினைப்பதை எல்லாம் எழுதி விடுகின்ற அளவுக்கு என் மனம் இலட்சியத் தனங்கள் மிகுந்ததல்ல  . புரிதல், உணர்தல் ,பகிரல் இவற்றில் எல்லையே இல்லா உணரல் பகிர்வதற்கு ஏற்றது போல இல்லாமையால் எமக்கிடையேயான புரிதல்களை கேள்விக் குறி ஆக்கிவிடும்.
----------------------------------------------------------------------

Sunday 23 September 2012


????????????????????

எதையுமே வரையறுத்த கணித விஞ்ஞான பாடங்கள் படிச்சு எதையுமே ஒரு தேற்றம், விஞ்ஞான விளக்கம் கேக்கிற மன நிலை எப்பத்தான் எங்களுக்கெல்லாம் மாறுமோ தெரியல. அது என்னவோ படிச்சத நாங்கள் எங்கையும் பிரயோகிச்சு பார்க்க முயலல்தான்  அப்பிடி போல. ஒவ்வொரு சம்பவங்களுக்கும் விளக்கம், தீர்வு, அடுத்த கட்டம் எண்டு சிந்திக்கிறதே பிழைப்பா போச்சு. இப்படி ஒரு சம்பவம் நடந்திச்சு எண்டு அப்படியே உள்வாங்கி சமன்பாட்டில X = ??? காணாம விட மாட்டம். வரையறுத்தல், தீர்த்தல், எதிர்வு கூறல், விளக்க முயலல் எண்டு மனம் கணித தன்மை கொண்டே நிக்குது. இத்தனைக்கும் கணிதத்தில புலி கிடையாது. அது ஒரு வாழ்க்கைத் துணை போல கூடவே வந்தது. வைப்பு (கீப்) கிடையாது, அது என்ன துணை??? எப்போதும் நேசிக்கப் ப்படும் உறவில்லை துணை . ஆனா வைப்பு அவ்வாறில்லை அநேகமாக  ..:) கல்வியை உவமித்தல் கடைசியில் இவ்வாறனதொரு பிறழ்வு கலந்த மன நிலையில் , எதற்கான உவமைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்கிற ஒரு வாசிப்பு நுகர்வு புரியாத மன நிலையில்தான் நிகழ்கிறதா? அல்லது எழுத்து, அதன் போக்கு புதுமையாக  இருக்க வேண்டும் என்கிற அற்ப ஆசைகளின் வெளிப்பாடா? இதற்கு கூட வரையறைகளை தேடவே மனம் எத்தனிக்கிறது, எனக்கே புரியாத என்ன சொல்ல விளைகிறேன் என்று தெரியாத திடமான நோக்கு இல்லாத மன  நிலையில் எழுத வேண்டும் என்கிற மன நிலையை தேடிக் கொண்டிருக்கிறேன்,  மது போதையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. என்னை உத்தமனாக்க என்னோடு போராடுவதில் போதை எப்போதுமே வென்று விடுகிறது. சிரிப்பை, கண்ணீரை விரைவாகக் கொண்டு வந்து மனிதனாக்க முயல்வதில் போதைக்கு முதலிடம் , எப்பவும் உன்னுடன். :) எதோ ஒரு விமர்சன வரையறுப்புகள் கூட நேரேதிர்த்தன்மை கொண்ட நோக்கல் இவ்வாறான மனோ நிலையை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையிலும் ஏன் இவ்வாறான தேடல்கள் என்ற கேள்விகள் கூட பதில் இல்லதவையாய் போகட்டும் . எழுதும்போது எழுத்துக்கள் கேள்வி கேக்கட்டும். கையில் ஓர் நடுக்கம் இருக்கட்டும். ஏன் என்கிற கேள்விகளிற்கான பதில்கள் கோர்வையாகி அவை கேள்விகளாகட்டும். இப்பதிவுக்கான தலைப்பை சிந்திக்க முதல் தலையங்கம் தானாகவே அங்கு வந்து விழட்டும். 
...........................................................................................................................

 உன்மீதான அக்கறைகளை ஏற்றுக் கொள்ளும்  மன நிலை உனக்கு  எப்போதும் இருக்கட்டும் என்பது நீ நம்பும் கடவுள்கள் மீதான பிரார்த்தனைகள் ஆகட்டும்  :)
........................................................................................................

Monday 28 May 2012

கிறிஸ் ஏஞ்சல் (Criss Angel ), Magic நுட்பங்கள்

பின்னணி  குரலையும் கேட்டால் மட்டுமே புரியும்.





















தண்ணீரில் நடத்தல் 


எப்பிடி??
.................................................................................................................................



பறத்தல் 



எப்பிடி ?????



Roller


எப்படி????

................................................................................................................................................

வேறு சில நுட்பங்கள்