Tuesday 27 April 2010

இப்பிடியும் வர்ணிக்கலாமுல்ல..

சேலை அணிந்த போது நீ மரபுக் கவிதை
சுடிதாரில் புதுக் கவிதை
ஆனால் என்கனவில் ஹைகூவாய்......
........................................................................

எட்டு மாதம் போயும் உன் இடதுகையிலுள்ள
கெளரி காப்பின் சிவப்புநிறம்  குறையவில்லை.
அது உன்னை அணைத்துக் கொண்டிருக்கும்
சந்தோச வெட்கத்தால்.
........................................................................

ஆண்டாள்மாலை போல தாவணியை நீ அணிய
(அதாங்க சிம்ரன் ஸ்ரைல்)
அடிவயிறு கலக்குதடி
நீ ஆண்டாள் போல யாரையும் நினைக்கிறியோ எண்டு.
..........................................................................
கழுத்தில் உள்ள சங்கிலியை கையிலெடுத்து
என்னோடு நீ பேசும்போது
"எப்போது இதைக் கழற்றி தாலியைக் கட்டப் போறாய்"
என கேட்பதுபோல் இருக்கிறது.
.........................................................................
அடிக்கடி உன் சேலையை சரி செய்யாதே
பாவம் உன்னைத் தொட்டுக்கொண்டிருக்கும்
சேலை நூல்கள்.
.......................................................................
பயந்து போய் தடுக்காதே
காற்றில் பறக்கின்ற  தாவணியை
உன்னை அணைப்பதை நிறுத்தி
அவை எங்கும் பறந்துவிடா ..............
                                                       நன்றி தமிழன் கறுப்பி
....................................................................
குடை பிடித்து நடக்காதே
அழகு வெளியே போகாமல்
முழுவதும் தரைக்குத் தெறித்து
பூமியதிர்ச்சி வந்துவிடும்.



Wednesday 21 April 2010

அரியஸ் exam ...............


பல்கலைக்கழகங்களில் அரியஸ் பரீட்சைகள் எழுதுவது ஒரு வித்தியாசமான் அனுபவம். எத்தனையோ பட்டறிவைத் தந்துவிடும். proper பாடங்களோடு அரியஸ் பாடங்களையும் எழுதும்போது ஏற்படும் நெருக்கடிகள் வாழ்க்கையில் தவற விடுதலால் ஏற்படும் இழப்புகளை உணர்த்தக் கூடிய விடயங்கள். அதற்காக எழுதும் பரீட்சைகளில் கோட்டை விட்டு அடுத்தமுறை எழுதினால் வாழ்க்கைப் பாடத்தைக் கற்கலாம் என்று சொல்ல வரவில்லை :) .

இவ்வாறு தனது முறையைத் தவற விட்ட ஒரு மாணவனின் குட்டிப் புலம்பலே இந்தப் பதிவு.
.............................................................................
ஒன்றில் சரி எண்டு சொல்லியிருக்கலாம்
சந்தோசத்தில் படிச்சிருப்பன்.
மாட்டேன் என்றிருக்கலாம்.
போனா போகுது நீ பெரிய ஐஸ்வர்யாராயோ ?
 எண்டு தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியாப் படிச்சிருப்பன்.
எதுவும் இல்லை .............
உன்ட தொடர்பைத் தேடி அலைந்தபோது (phone number ,facebook ,  mail address)
எப்பவும் உன்ட யோசினைதாண்டி 
எல்லாம் கிடைச்சாப் பிறகு ...............
உன்ட யோசனை மாறல்லை .
அந்த உனக்கும் எனக்கும் இடையில் இருந்த  relationship ...............
சீ............. எனக்கு மட்டும் தெரிந்த அந்த  relationship மாறிப் போச்சு.
என்னோட ஒரு சங்கடமும் இல்லாம கதைக்கிறாய் 
நட்பாத்தான் பழகிறியோ???
இப்பிடி முதல்ல நட்பை  வளர்த்து பிறகு காதலை சொன்னா நல்லமோ?
அல்லது வேற யாரும் உன்ன முடிவு கேட்கைக்குள்ள நான் கேட்பமோ ??
இப்பிடி ஆக்கிவிட்டாய் 
தொலைவில இருக்கும்போது 100 % வீதம் காதலி இப்ப ????
விளங்கக் கூடிய மாதிரி என்னெண்டு சொல்ல ???
அதாங்க  ரஹ்மான் sir இன்ட இசை மொழியில 
"தொலைவான போது பக்கமானவள் 
பக்கம் வந்த போது தொலைவாவதோ ????"
இதெல்லாம் பரவாயில்லை 
நடந்தது என்ட study leave  இலை எல்லே    கிராதகி ............
இப்ப எனக்கு நாளைக்கு விடிய exam பின்னேரம் exam 
நாளைக்கு பின்னேரம் exam .............
போங்கடி உங்கட காதலும் மண்ணாங்கட்டியும்.
டீன் எஜில வர வேண்டிய காதல் அதுக்குப் பிறகும் 
வந்தா கஷ்டம்தான் ...............



Wednesday 7 April 2010

சந்தோசத்தில் புலம்பல்

மனிதன் வேலை ஏதும்  செய்யாமல் இருக்கும்போதுதான் தேவையில்லாத சிந்தனைகள் கனவுகள் எல்லாம் வந்து கெட்டுப் போகிறான் எனக் கேள்விப்பட்டதுண்டு. அனுபவிக்கும்போது உண்மைதான் போலிருக்கிறது. சிறிது நாட்களாக பகல் நேரம் முழுவதும் படிப்போடு சம்பந்தப்பட்ட வேலை ஒன்று சந்தித்ததால் ஈடுபாடாக வேலை செய்யக் கூடிய மன நிலை உருவாகியிருக்கிறது. தேவையற்ற கற்பனைகள் குறைந்து விட்டிருக்கின்றன. நீ கனவிலோ நினைவிலோ வருவதில்  குறைந்திருக்கிறாய். தேவையற்ற சிந்தனைதான் காதலோ என எண்ணத் தோன்றுகிறது. இவ்வளவு காலம் கழித்துத்தான்  விளங்கியதோ என சிரிக்கலாம் போலிருக்கிறது. நான் மறந்தாலும் உன்னை ஞாபகப்படுத்துகிற நண்பர்கள். இதனால் அவர்களை தலையில் தூக்கிக் கொண்டாடவும் இல்லை. வெறுக்கவும் இல்லை. சமநிலையான மனநிலை. வயது போய்விட்டதால் அப்படியோ ??? என்ன பெரியவயது ? இல்லை இல்லை கால் சதம் அண்மித்து விட்டால் பிறகென்ன? அனாலும் ஒரு மூலையில் உனக்கான இடம் உறுதியாகத்தான் இருக்கிறது. FACE BOOK இலே உனது சுவரில் PROFILE PICTURE இலே நீ போட யாரோ hi jothika where is ur soorya ?? என எழுதியிருந்த போது சிலிர்க்கின்ற மனது. ஒரு தலைக்காதல் சீ................. இல்லை இல்லை காதல் மீதான ஏக்கம் உனக்கு இருக்கா இல்லையா?? எத்தனை தரம் என்னையே நான் பார்த்துக் கேட்பது ????  எதோ வேலை செய்து கிழிச்சு எல்லாத்தையும் மறந்த ஞானி போல பேசினாயே போடா அரை லூசு ,,,,,,,,,,,.........................

    ..........................................................................................

பங்குனி பருவப் பாளை. இந்த தருணத்தில் யாழ்ப்பாணத்தில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது அளவுக்கதிகமான சந்தோசம்.