Thursday 11 March 2010

உலகை ஆளும் GIS - பகுதி 2

முதலாவது பகுதியில் GIS என்றால் என்ன என்பது பற்றி பார்த்திருந்தோம் இம்முறை தரவுகள் சேகரிக்கப்படும் பல்வேறு முறைகள் பற்றி ஆராய இருக்கிறோம். GIS என்பது  கணனி மயப்படுத்தப்பட்ட ஒரு system  என பார்த்திருந்தோம்.  கணனி மயமான இந்த system  எல்லா வகையான தரவுகளையும்   உள்வாங்கிக் கொள்ளாது. ஆனால் இதற்கு ஏற்றாற்போல் தரவுகளின் வடிவத்தை (format) மாற்ற வேண்டிய நிலைப்பாடும் இங்கு உள்ளது. தரவு வடிவங்கள் (data format) பற்றி பிறகு ஆராய்வோம்.

எவ்வாறு தரவுகள் சேகரிக்கப்படலாம்??

01 ) வரைபடங்கள் (maps)
வரை படங்கள் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.வரைபடங்களும் இரு  வகையாக பிரிக்கப்படலாம்.

1.Conventional map (பாரம்பரியமுறை வரைபடங்கள்)
2.Digital maps (இலத்திரனியல் வரைபடங்கள்)

பாரம்பரிய முறை வரைபடங்களை  உபயோகிப்பதில் பல சிக்கல்கள் இருந்தாலும் கூட பாவிக்க முடியாது என்று கூறி விட முடியாது. ஆனால் இலத்திரனியல் வரைபடங்கள் GIS இன் தோழர்கள் போன்றவை. 
இலத்திரனியல்
 வரைபடம்



பாரம்பரிய வரைபடம்

02 ) Arial Pahotographs
   விமானங்களிலிருந்து வரைபட உருவாக்கம் போன்ற தேவைகளுக்காக எடுக்கப்படும் புகைப்படங்கள் 


இப்புகைப்படங்கள் பல்வேறு பகுத்தாய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்படும்.


03 ) செய்மதிப் படங்கள் (Sattelite images) 
இவையும் பலவேறு பகுத்தய்தலின் (Analyze) பின்பே பயன்படுத்தப்
 படுகின்றன.  Georeferencing , Clssiification ,  Filtering போன்றன இவைபற்றி எதிர்வரும் பகுதிகளில் விரிவாக ஆராய இருக்கிறோம். 
செய்மதிப் படம் ஒன்று.

Arial Pahotographs நேரடியாக பாவிக்கப்படக்கூடியது போல தோற்றமளித்தாலும் செய்மதிப் படம் அவ்வாறு பாவிக்க முடியாது என படத்தை பார்த்தவுடன் புரிகிறது அல்லவா ??

04 )நில அளவை மூலம் பெறப்படும் தகவல்கள் (Field Surveying )

05 ) மனித உள்ளீடுகள் (Human Inputs )
தரவுகளை மனிதர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளல்.
உதாரணம்:- "இவ்விடத்திலே பெரிய கட்டடம் ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன.. அது என்ன கட்டடம் ?"

இவ்வாறாக தரவுகளை உள்வாங்கல்


முக்கியமான தரவு சேகரிக்கும் முறைகள் பற்றி ஆரர்ய்ந்திருக்கிறோம். மேலும் அடுத்த  GIS பதிவில் சந்திப்போம்.

Sunday 7 March 2010

FACEBOOK சுவரில் சுட்டது.

பயம்
 உன்னைப் பார்த்தபோது சந்திப்பதற்குப்  பயந்தேன்.
உன்னை சந்தித்தபோது காதலிக்கப் பயந்தேன்.
காதலிக்கின்ற இந்தநாட்களில் உன்னை இழந்துவிடுவேனோ என பயப்படுகிறேன் .

இணைய நட்பு
இணைய தளத்தைத் தளமாக்கிக் கொண்டு புனைந்திடுவார் நட்பை!மனமும் -- இணையும் இசைந்திடும் நட்பு வலைபின்ன !
காலம் இசைமீட்டிப் பார்த்திருக்கும் சொல்.
அடுத்தவீட்டில் வாழ்வார்!
அருகிலே உள்ள அடுத்தவீட்டில் வாழ்பவர்கள் யாரென்று கேட்டால் கடுகடுத்த சொல்லால் தெரியாதே! என்பார்!
ஒதுங்கியே வாழ்ந்திருப்பார் இங்கு.
பழகினாலும் நாமோ பழகா விடினும்
 உரசியே வந்துநின்று நட்புவலை பின்னி

...............................................................................
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்
.........................................................................................

நான் எழுதிய கவிதை என்னை பார்த்து கேட்கிறது எப்போது அவள் என்னை படிப்பாள் என்று? என்னவளே பதில் சொல்….??!?!?
.......................................................................................
நன்றி சங்கர்கணேஷ், கஜன்,நிஷாந்தன்


எழுதுவதற்கான மனநிலையும் எண்ணங்களும் அற்றுப் போயிருக்கின்றன. மனதில் வெறுமையே குடி கொண்டிருக்கிறது. ஒருவகையில் இப்படி இருப்பதும் சந்தோசமாகவே இருக்கிறது. ஆனால் நிறைய விடயங்களை இழந்துவிட்டது போன்ற பொய்யான உண்மை அடிக்கடி வெருட்டுகிறது. அனால் நான் சந்தோசமாகவே இருக்கிறன். (இது முகப்பு நூல் சமாசாரம் இல்லை)