Thursday 30 July 2009

எப்போது செத்துப்போவேன்?

ஒரு முட்டாள் கழுதை ஒன்று வைத்திருந்தான். அவன் கழுதையோடு வழமையாக வேலைக்கு செல்லும் வழியில் ஒரு ஞானி வாழ்ந்து வந்தார். அவரிடம் இந்த முட்டாள் எனக்கு சாத்திரம் கூறுமாறு தினமும் நச்சரிப்பான். ஞானியோ பிறகு ஒரு நாள் சொல்லுகிறேன் என காலத்தைக் கடத்தி வந்தார். ஓர் நாள் அவன் ஞானியிடம் நான் எப்போது செத்துப் போவேன் என்பதை மட்டுமாவது கூறுமாறு கேட்டான். எதோ வேலையிலிருந்த ஞானி உன்னுடைய கழுதை ஒரு நாளில் மூன்று தடவை தும்மினால் நீ இறந்து விடுவாய் என்கிறார். முட்டாளுக்கு பயங்கர சந்தோசம் ஏனெனின் அவனுடைய கழுதை இதுவரை தும்மியதை அவன் காணவில்லை. அன்றைய பயணத்தை அவன் மகிழ்ச்சியுடன் தொடர்கிறான்.

போய்க் கொண்டிருக்கையில் திடீரென்று கழுதை ஒரு தடவை தும்மியது.இவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தனது தொப்பியை கழற்றி கழுதையின் மூக்கைச் சுற்றிக் கட்டுகிறான். கழுதை சிறிது நேரம் அமைதியாக பிரயாணத்தைத் தொடர்ந்தது. தொப்பியிலுள்ள தூசி கழுதையின் நாசிக்குள் போய் அது இரண்டாவது முறையும் தும்மியது. மரண பயம் முட்டாளுக்கு அதிகாமகியது. இன்னொரு முறை தும்மினால் இறந்துவிடுவோம் எனும் பயத்தில் நல்ல பலமான உருண்டையான இரு கற்களை தெருவிலே பொறுக்கி தனது செல்லப் பிராணியின் மூக்குத் துவாரத்தில் அடைகிறான். கற்கள் சரியாக அடையப் பட்டுள்ளதா என குனிந்து பார்க்கையில் கழுதை மீண்டும் பெரிதாக ஒரு தும்மல் போடுகிறது. அவன் அடைந்த கற்களில் ஒன்று நெற்றிப் பொட்டில் பட்டு இறந்துவிடுகிறான்.

4 comments:

vasu balaji said...

நல்லா இருக்கு:))

Admin said...

நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றிகள்...

ஆ.ஞானசேகரன் said...

ஆகா....

பனையூரான் said...

நன்றிகள் பாலா,சந்ரு,
ஆ.ஞானசேகரன்