Saturday 4 July 2009

A9 திறந்தாச்சு

" இன்னும் பாதையை திறக்கிறாங்கள் இல்லை "
"எப்ப பாதையால வீட்ட போறதோ தெரியாது"

பல பேரின் வாயால் இந்தப் புலம்பல்களை கேட்கக் கூடியதாய் இருக்கிறது.

A9 பாதை திறந்தால்தான் பல பிரச்சினைகளுக்கு பாதை கிடைக்கும்என்பது உண்மை. யாழ் மக்கள் பாதை மூடியுள்ளதால் பல அத்தியாவசிய பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைப்பாடு உள்ளது. வீட்டைப் பிரிந்து வெளியிடங்களில் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.


ஆனால் இன்று தங்களது சொந்த இடங்களை தொலைத்து விட்டு கூடாரங்களுக்குள் நாளாந்த வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களினூடாக அவர்கள் அங்கு இல்லாமல் நாம் அப் பாதையால் செல்வது அவசியமான ஒன்றா???

அவர்கள் நாளாந்த வாழ்க்கை நிம்மதியின்றி சென்று கொண்டிருக்கையில் எங்களுக்கு பாதை வேண்டாம் .

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

//அவர்கள் நாளாந்த வாழ்க்கை நிம்மதியின்றி சென்று கொண்டிருக்கையில் எங்களுக்கு பாதை வேண்டாம் .//

ம்ம்ம்ம்ம்ம்...