Wednesday 21 April 2010

அரியஸ் exam ...............


பல்கலைக்கழகங்களில் அரியஸ் பரீட்சைகள் எழுதுவது ஒரு வித்தியாசமான் அனுபவம். எத்தனையோ பட்டறிவைத் தந்துவிடும். proper பாடங்களோடு அரியஸ் பாடங்களையும் எழுதும்போது ஏற்படும் நெருக்கடிகள் வாழ்க்கையில் தவற விடுதலால் ஏற்படும் இழப்புகளை உணர்த்தக் கூடிய விடயங்கள். அதற்காக எழுதும் பரீட்சைகளில் கோட்டை விட்டு அடுத்தமுறை எழுதினால் வாழ்க்கைப் பாடத்தைக் கற்கலாம் என்று சொல்ல வரவில்லை :) .

இவ்வாறு தனது முறையைத் தவற விட்ட ஒரு மாணவனின் குட்டிப் புலம்பலே இந்தப் பதிவு.
.............................................................................
ஒன்றில் சரி எண்டு சொல்லியிருக்கலாம்
சந்தோசத்தில் படிச்சிருப்பன்.
மாட்டேன் என்றிருக்கலாம்.
போனா போகுது நீ பெரிய ஐஸ்வர்யாராயோ ?
 எண்டு தூக்கி எறிஞ்சிட்டு நிம்மதியாப் படிச்சிருப்பன்.
எதுவும் இல்லை .............
உன்ட தொடர்பைத் தேடி அலைந்தபோது (phone number ,facebook ,  mail address)
எப்பவும் உன்ட யோசினைதாண்டி 
எல்லாம் கிடைச்சாப் பிறகு ...............
உன்ட யோசனை மாறல்லை .
அந்த உனக்கும் எனக்கும் இடையில் இருந்த  relationship ...............
சீ............. எனக்கு மட்டும் தெரிந்த அந்த  relationship மாறிப் போச்சு.
என்னோட ஒரு சங்கடமும் இல்லாம கதைக்கிறாய் 
நட்பாத்தான் பழகிறியோ???
இப்பிடி முதல்ல நட்பை  வளர்த்து பிறகு காதலை சொன்னா நல்லமோ?
அல்லது வேற யாரும் உன்ன முடிவு கேட்கைக்குள்ள நான் கேட்பமோ ??
இப்பிடி ஆக்கிவிட்டாய் 
தொலைவில இருக்கும்போது 100 % வீதம் காதலி இப்ப ????
விளங்கக் கூடிய மாதிரி என்னெண்டு சொல்ல ???
அதாங்க  ரஹ்மான் sir இன்ட இசை மொழியில 
"தொலைவான போது பக்கமானவள் 
பக்கம் வந்த போது தொலைவாவதோ ????"
இதெல்லாம் பரவாயில்லை 
நடந்தது என்ட study leave  இலை எல்லே    கிராதகி ............
இப்ப எனக்கு நாளைக்கு விடிய exam பின்னேரம் exam 
நாளைக்கு பின்னேரம் exam .............
போங்கடி உங்கட காதலும் மண்ணாங்கட்டியும்.
டீன் எஜில வர வேண்டிய காதல் அதுக்குப் பிறகும் 
வந்தா கஷ்டம்தான் ...............



1 comment:

வடலியூரான் said...

அப்ப ரீன் ஏஜ்ஜிலை லவுசு பண்ணினா சோலி இல்லை எண்டு சொல்லுறியளோ