Monday 8 February 2010

விரிவுரையில் நண்பர்கள் பகிர்ந்து கொண்டவை

ஒருவேளை நீ என்னைக் காதலித்து
நாமிருவரும் கைப்பிடித்து
பிள்ளை குட்டி பல பெத்து
வாழ்க்கையை வாழ்ந்து கழித்து
மரணவாசல் திறக்கும்போது
எனக்குத் தெய்வ நம்பிக்கை வந்தால்
இறைவனிடம் கேட்பேன்
என்னவளே முதலில் சாக வேண்டும் என்று
ஒருவேளை நான் முதலில் இறந்துவிட்டால் 
தனியாக நீ அல்லல் படுவதை 
பேயாக இருக்கும் என்னால் தங்கிக் கொள்ளவே முடியாது. 

...........................................................................



கையிலே புத்தகம் மனம் முழுக்க நீ
உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு நாளும் கடக்க
ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டுகிறேன்
கடக்கின்றன பல பக்கங்கள்
திடீரென புத்தகத்திலுள்ளவற்றை    வாசிக்கிறேன்
ஒன்றுமே புரியவில்லை
அப்போதுதான் உறைக்கிறது
உன்னோடு நான் வாழவில்லை,
நீ என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது . 

5 comments:

நிலாமதி said...

என்னால் தாங்கி கொள்ளவே முடியாது......உண்மையான் காதல்

sathishsangkavi.blogspot.com said...

//மரணவாசல் திறக்கும்போது
எனக்குத் தெய்வ நம்பிக்கை வந்தால்
இறைவனிடம் கேட்பேன்
என்னவளே முதலில் சாக வேண்டும் என்று//

இதுக்குப் பேர்தாங்க காதல்....

பனையூரான் said...

நன்றிகள் நிலாமதி, Sangkavi வருகைக்கும் பகிர்வுக்கும்

வடலியூரான் said...

//அப்போதுதான் உறைக்கிறது
உன்னோடு நான் வாழவில்லை,
நீ என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது

நல்ல கவிதை நண்பர் பனையூரானே...அதென்ன இப்ப ஒரே காதலாவே உங்களுக்குவந்து தொலைக்குது..

பனையூரான் said...

சுகமாக யாருக்கும் பயப்படாமல் எழுதக் கூடிய தலைப்பு காதல் ஒழிய வேறேதுமில்லை நண்பா