Tuesday 2 February 2010

இன்றைய தருணங்கள்

மலையைக் கட்டி மயிராலை இழுக்கப் பார்த்தோம். வந்தா மலை போனா மயிர்தானே என்று எண்ணிக்கொண்டு. மயிர் போச்சுது. உயிரும் போகுமோ தெரியல்லை. அதான் இலங்கை ஜனாதிபதித் தேர்தல்.   
............................................................................

உன்னைப்பற்றிய எண்ணங்கள் அதிகரித்திருக்கின்றன. காதலை சொல்வதற்கான வயது கடக்கும் தறுவாய் போன்றொதொரு  கற்பனையான கால எல்லைக்கோடு முன்னே நின்று வெருட்டுகிறது. உன்னை facebook இல் சந்தித்தபின் சந்தோசமும் பயமும் ஏக்கமும் சேர்ந்து என்னை பாடாய்ப் படுத்துகின்றன. உன் புகைப்படம் கிடைத்தும் வேண்டாம் என விட்டு வந்தபோதும் அவற்றை  சேமிக்கத் தொடங்கியிருக்கின்ற இனம்புரியா
பைத்தியக்காரத்தனம் . அதிலே சிரித்துச் சிரித்தே என்னை ...................
.......................................................................

இறுதி semestar ஒரு அவசர உலகமாய். ..........

.......................................................................  

நீண்ட நாட்களுக்குப்பின் பதிவுலகத்தினுள் நுழைகிறபோது எழுத்துகளின் வேகத்தில் ஒரு வித மந்தம். பிரயோசனமாய் எதுவுமே எழுதமாட்டேன் என்கிற என்மீதான அசாத்திய நம்பிக்கை.
...................................................................

  

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

இரண்டுமே யோசிக்க வைக்கின்றது