Monday 10 October 2011

தலை வெடிக்குது

அப்பிடி ஒண்டும் வெட்டிப் புடுங்கலை ஆனால் தலை வெடிக்குது. போதாமல் இருக்கிற நேரம். நேர முகாமைத்துவம் எண்டு பெரியாள்  மாதிரிக் கதைக்கிற நானா இப்பிடி? புதுசா சேர்ந்திருக்கிற வேலை. இன்னும் ஒரு இடத்துக்கு வரலை உடல்  மனசு எல்லாம்தான். அழகான கற்பனைகள் விதண்டாவாதங்கள் குறைஞ்சு போகுது. வயது வர வர இப்பிடித்தானோ. என்னை எப்படா கட்டி முடிக்கப் போறீங்கள் என்று எங்களைப் பார்த்து ஏக்கமாய்  கேட்கிற எங்கட நூல் நிலையம். இப்ப எல்லாம் அந்த கனவுக் கட்டடம் என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு.  சுத்தி சுத்தி படமெடுக்க, பொறடா என்னை அம்மணமா போட்டோ எடுக்கதடா எண்டு சொல்றவள் இப்ப?????

போட்டோ மட்டுந்தான் உன்னால எடுக்கேலும். போட்டோவை எடுப்பாய் facebook இல போட்டு சும்மா நாலு வரி  எழுதுவாய் அவளவுதான். ஒரு பக்கம் ஒண்டு வச்சிருகிராய் இப்ப அதக் கவனிக்க உனக்குப் பஞ்சி என்னடா என்று கேட்கிறாள் . நீங்கள் தொடங்கிப் போட்டு அரைகுறை உடையோட நிக்கிறதப் போல என்னை நிப்பாட்டி வச்சிருக்க, ஏன் உந்த வடிவான காசுள்ள பிள்ளைய இன்னும் ஒருத்தருக்கும் கட்டிக் குடுக்கலை? வேற ஈதும் சிக்கலோ எண்டு கேட்கிற மாதிரி உங்கட நிர்வாகத்தையும் கேட்கப் போறாங்கள் எண்டு சொன்னது போல இருந்தது கடைசியா படம் எடுத்தப்ப.  

வளர வளரப் படம் எடுத்து அழகு பார்த்த நாங்கள் வளாந்தாப் பிறகு கணக்கில எடுக்காம இருக்கிறது உண்மையா வடிவா இல்லை. .
கடைசியா சொல்றன் ஒரு contractor ஒருத்தனிட்ட என்ன விடுங்கோ. கால எல்லை ஒண்டை குடுங்கோ. அதுக்குள்ளே முடிக்காமல் விட்டால் ஒவ்வொரு நாள் பிந்திறதுக்கும்  ஒரு பொருத்தமான தொகையை களிக்கிறது எண்ட மாதிரி செய்தா நல்லம். இல்லாட்டி உங்களால ஏலாது. எத்தினை நாளுக்கு மேசன் வீட்டை விடிய போய்க் காவல் நிக்கிறது. அதுக்குள்ளே சன்னல் நிலையை ஓடர் குடுங்கோ. காசை வச்சுக் கொண்டு என்ன வட்டியையே பெருக்கிறீங்கள்? கடைசியா கனவில வந்து சொன்னது இப்பிடித்தான் .


No comments: