Tuesday 8 June 2010

உன்ட பேரை எங்கை பாவிக்க ...

ஊரில ஆற்ற பிள்ளைஎன்று கேட்டா
உன்ட பேரை பாவிக்கிறது இல்லை
பாவிச்சா  ஆருக்கும் தெரியாது
விண்ணப் படிவங்களிலும் கேட்பதில்லை உன்பெயர்
ஆனால் உன்னை ஒத்தவர்களுக்கு
 கவிதை எழுதுபவர்கள் அதிகம்.
மனதிலே ஒப்பற்ற இடம் உனக்கு .
ஆனால் உன்ட பேரை பாவிக்க முடியல்லை.
மின்னஞ்சல் தனி நபர் கணக்குகளிலும்
கேட்கப்படுவதில்லை உன் பெயர்.
பாவிச்சே ஆகோணும் எண்டு உறுத்தியது மனசு
கையெழுத்திலும் கடவுச் சொல்லிலும்  
உன் பெயரை  நான் பாவிக்கிறன் அம்மா .....


6 comments:

M. Azard (ADrockz) said...

அநேகர் சிந்திக்காத பகுதி, பார்த்தவுடன் கவருகிறது, வாழ்த்துக்கள்

M. Azard (ADrockz) said...
This comment has been removed by the author.
நிலாமதி said...

வித்தியாசமான சிந்தனை ......வாழ்த்துக்கள்.

பாலா said...

அருமை

தமிழ் மதுரம் said...

தாய்மையின் மென்மையினப் உணர்த்தும் கவிதை. அருமை.

பனையூரான் said...

அனைவருக்கும் நன்றிகள் பாராட்டுக்களுக்கு