Friday 5 November 2010

அவ்வப்போது அவசரத்தில்


உன்னுடைய நிழல் படங்களை சேகரிக்க நினைத்ததில்லை,
இன்னும் நீ என் காதலை ஏற்றுக் கொள்ளாத வரையில்.
ஏற்றுக் கொண்டால் அந்தப் படங்கள்தரும் சந்தோசத்தின் நீளம்
மறுத்தால் ஏற்படும் கவலையை விட எவ்வளவோ குட்டையானது.



காதல் மேல் காதல் வந்து உன்னைக் காதலிக்கவில்லை
உன்னைக் காதலித்ததால் வந்ததுதான் காதல் மீதான காதல்



அவசரமாக வாங்கிய தொப்பியில்
உன் பெயரின் முதலெழுத்து
நானாக உன்னை நினைத்தாலும்
சில வேலை எதேட்சையாகவும் நீ.....,
நீயாக நினைத்து நான் உன் நினைவில் வரமாட்டேன்
என்று நன்றாக தெரியும் ஆனால்
எதேட்சையாகவேனும் வருகிறேனா?????????




நண்பர்களை, வீட்டை பிரிந்திருக்கையில்
குறைந்திருக்கிற உன் நினைவுகள்
புரிகிறது என் காதலின் பலமின்மை



நண்பர்களாய் இருப்போம் என்றாய்
வேண்டாம் அது உயரிய இடம்
பல படிகள் கீழே போய்
காதலர்களாகவே இருப்போமே என்கிறேன்




எங்கட காதலெல்லாம் பொய் மாதிரிக் கிடக்கு மச்சான்
அவனவன் காதலுக்காக செய்யிற கூத்துகளை
பார்க்கிறப்ப ............
இப்ப பார்
"நீ  காதலிக்காக எதுவும் செய்யல்லை
நான்  தோத்த காதலுக்காக எதுவும் செய்யல்லை "

                                                                                                                                                                            

4 comments:

Muruganandan M.K. said...

நல்ல கவிதை.
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

நிலாமதி said...

நல்ல கவிதை. உன்னை புரிந்த ஒருத்தி கிடைக்க் வாழ்த்துக் கள் .
தீபாவளி வாழ்த்துக்கள் என்றும் தீபம்போல் உன் எதிர்காலம்பிரகாசிக்கட்டும்.

ம.தி.சுதா said...

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
mathisutha.blogspot.com

சேவையன். said...

உணர்வு பூர்வமான வரிகள்.....எல்லாம் காலம் என்னும் மருந்தால் குணமாக கூடியதுதான்