Sunday 18 December 2011

மனசை கசக்கிப் ..........

காதலுக்கான  ஏக்கத்துடன் அடிக்கடி கேட்டகத் துடிக்கிற பாட்டா ஏழாம் அறிவு படத்தில ஹரிஜெயராஜ் இசையில கபிலனின் வரிகளில S .P . B இன் குரலில ஏதோ  மனசுக்கு நிம்மதியை தந்து விடக் கூடிய இசையில் நல்லா இருக்கு. இளமை எண்டா அது ஹரிஷ்தான். பாடல்களில இளமையை வாலிபத்தனத்தை தரக் கூடிய நிலையில் ஹரிஷுக்கு நிகர் எவரும் இல்லை. நாங்கள் ரஹ்மான் பைத்தியம் ஆனா ஹரிஷைப்  பார்த்து வியந்து போறது மெலடி பாடல்களில் அவருடைய ஒலிப் பதிவில் இருக்கிற துல்லியம் .என்னதான் சொன்னாலும் தமிழ் திரையிசையில்  ரஹ்மானுக்கு அடுத்ததா எனக்கு ஹரிஷ்தான். 

coooool  பனையூரான் எதுக்கு இப்படி உணர்ச்சிவசப் பட்டு சொல்லவந்தது எதோ இப்ப ஏன் ஏன் சின்னப் பிள்ளைத்தனமா ???

S .P . B இன் குரல் வரிகளிண்ட அர்த்ததத்தை இசையால் சரியாக வெளிக் கொண்டுவந்திருக்கு. பெண்கள் காதல பெரிதாக கணக்கெடுக்காமல் இருக்கிறபோது ஆண்கள் உருகி உருகி காதலித்து உடைந்து போவது என்ற  கருவோடு  எந்த மொழியிலும்  நல்ல இசையில் அமைந்த பாடல்களின் ஆயுட்காலம் அதிகம். வழமையான உவமைகள் பல கையாளப் பட்டிருந்தாலும் தன்னுடைய உயிரோட்டமான இசையால் அவற்றை  புதுப்பித்திருக்கிறார் ஹரிஷ்.  ஆணோட காதல் கைரேகை போல கை ரேகை போல பெண்ணோட காதல் கைக் குட்டை போல என்ற வரி ஏதோ அழுத்தமா பதிய மறுக்குது. ஆனா புல்லாங்குழலை கையில் தந்தாளே என் மூச்சுக் காற்றை வாங்கிப் போனாளே என்ற வரி அழுத்தமா நெஞ்சில நிக்குது. கைரேகை கைக்குட்டை வரியில ஒட்டு மொத்தப் பெண்களையும் குறைத்து சொல்லறதால அது பிடிக்கலை என்ற அரசியல் எதுவும் இல்லை. :)   பாட்டில்  கவிஞர் நிறைய இடத்தில மூங்கிலைப் பற்றி சொல்றார். 
"புல்லாங்குழலை கையில் தந்தாளே என் மூச்சுக் காற்றை வாங்கிப் போனாளே"
ஓட்டை போட்ட மூங்கில் அது பாட்டுப் பாடக் கூடும் நெஞ்சில் ஓட்டை போட்ட பின்னும் மனம் உன்னை பற்றி பாடும் "
""காதல் ஒரு போதை மாத்திரை அதைப் போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை ""
அந்த வரியில S. P  .B  நக்கலா சிரிக்கிறது சூப்பர் .

அதென்ன மூங்கில் யாத்திரை நீரால் மூங்கில் அடித்து செல்வது போல எங்கே போகிறோம் என்று தெரியாம போகிற பயணம். "
"பொம்பிளைய நம்பி கெட்டுப் போனவங்க ரொம்ப... அந்த வரிசையில் நானும் கடைசியில்  நின்னேன் "
ம்ம் என்று சொல்லக் கூடிய ஒரு வரி .

பின்னணியில்  கடத்தால் (கடம் )  கொடுக்கப் பட்டிருக்கிற  பீட் பாடலுக்கு ஒரு அமைதியையும்  தந்து விடுகிறது. பாடலின் மூன்றாவது  நிமிடத்தில் ஒலிக்கின்ற பெண் குரல்  சுவேதா மோகனுடையது. 

என்னவோ இந்தப் பாட்டு மனசில நல்லா பதியுது . இதைப் பற்றி எழுத ரொம்ப பிந்தி விட்டேன்  என்பது  சின்ன கவலை.

இதை விட ........
அனேகமாக இசையில் சோகம் கலந்த இசை யாருக்குமே பிடித்துப் போவது வழமை. தமிழ் திரையிசையைப் பொறுத்தவரை பெரும்பாலும் காதல் சோகம், அம்மா சார்ந்த பாடல்கள் இந்த வகையில்  அடங்கும். பொதுவாக கலை என்று வரும்போது மனிதன் சோகம் என்ற உணர்வைசோகத்தோடு  ரசிக்கிறான். ஆனால் அதே சோகம் நிசமாக ஒருவனுக்கு ஏற்படும்போது வித்தியாசம். இசையைப் பொறுத்தவரை சோகத்தை பிரதிபலிக்கின்ற பாடல்களை அநேகமான இளைஞர்கள் தங்களுக்குள்ளே ஒரு சோகத்தை உருவகித்து அந்த இசையை ரசிப்பார்கள்.இரு தலையாகக் காதலிக்கும் காதலர்கள் கூட   காதல் சோக இசையை நிறையவே ரசிப்பதை காண்கிறோம் .ஆக   இவ்வாறான ஒரு வித்தியாசமான உணர்வு மனிதனிடம் இருப்பது வியப்புக்குரியதே.....

.............................................................................





 மறைத்து விடுகிறது 
அளவுக்கதிகமான வெளிச்சத்தையும் 
உன்னை நினைத்து கலங்கும் கண்களையும் 

.............................


Friday 14 October 2011

chellam என்கிற எந்தன்..........................

செல்லம் என்று தலைப்பிடலாம்தானே அதென்ன chellam என்று ஆங்கிலதில? அப்படித்தான்! அத தமிழில எழுதினா "S " என்ற  முறையில் உச்சரிக்கலாம் . chellam என்கிறப்ப அந்த ச் + எ    என்ற  அந்த உச்சரிப்பு சரியாக வரும். எண்ட காதலிய அப்பிடித்தான் கூப்பிடுவன். நீ மட்டும் இல்லை நாங்களும் அப்படித்தான் எண்டு சொல்றீங்களோ ? சரி சரி வருவம். அப்படி அந்த சொல்லை உச்சரிக்கிறப்பதான் அந்த காதலின் உறுதி விருப்பம்    ச் + எ எண்டு வெளிப்படுத்தலாம். I  need  u  chellam. ஆ பனையூரான் காதல் வந்திட்டோ என்று கேட்கப் போறீங்கள். வேண்டாம் அதேதும் வேண்டாம். காதல் ஏதும்  எண்டா அவளிட்ட சொல்றத விட்டிட்டு இல்லை  இல்லை எண்ட செல்லத்திட்ட sorry எண்ட chellaththidda சொல்றத விட்டிட்டு blog  ல எழுதணுமா ???? Sorry chellam.

அருகில் இருக்கும் போது பேசி பேசி இருக்க நேரமில்லை தூர இருக்கும்போது பேசாமல் இருக்கிற  நேரமில்லை எண்ட baba . (பிள்ளை )

காதல் காதல் .................அப்பிடித்தான் ..................

"ஜேய் "
அப்படி கூப்பிடாதடா ..
ஏன்  பிடிக்கலையோ ?
பிடிக்குது
அப்ப
அப்படித்தான் நெடுகவும் கூப்பிடாத ....

???????????????

ma angel .......................
இதுபற்றி .....
தேவதையை ஒப்பிட்ட அன்புள்ள காதலியே . அர்த்தமிலாப் பதிவு  ஒன்றை கிறுக்குத் தனமாய் எழுதி யாரும் என்னை ஏச யாராக இருந்தாலும் உனக்காக அவர்கள் மீது  நான் கோபப் பட இந்தப் பதிவு ....

சீ...... இப்படி எல்லாம் எழுதி நீ பார்த்து சந்தோசப் படவாவாது யாரையும் காதலிச்சிருக்கலாம் .

அமைதியாக நீண்ட கால  முத்தங்களை  பகிரா விட்டாலும்  குறுகிய நேர நெருக்கங்களில் என்றும் உன்னோடு chellam.



.....உன்னவன் ..... 

Monday 10 October 2011

தலை வெடிக்குது

அப்பிடி ஒண்டும் வெட்டிப் புடுங்கலை ஆனால் தலை வெடிக்குது. போதாமல் இருக்கிற நேரம். நேர முகாமைத்துவம் எண்டு பெரியாள்  மாதிரிக் கதைக்கிற நானா இப்பிடி? புதுசா சேர்ந்திருக்கிற வேலை. இன்னும் ஒரு இடத்துக்கு வரலை உடல்  மனசு எல்லாம்தான். அழகான கற்பனைகள் விதண்டாவாதங்கள் குறைஞ்சு போகுது. வயது வர வர இப்பிடித்தானோ. என்னை எப்படா கட்டி முடிக்கப் போறீங்கள் என்று எங்களைப் பார்த்து ஏக்கமாய்  கேட்கிற எங்கட நூல் நிலையம். இப்ப எல்லாம் அந்த கனவுக் கட்டடம் என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி ஒரு தோற்றப்பாடு.  சுத்தி சுத்தி படமெடுக்க, பொறடா என்னை அம்மணமா போட்டோ எடுக்கதடா எண்டு சொல்றவள் இப்ப?????

போட்டோ மட்டுந்தான் உன்னால எடுக்கேலும். போட்டோவை எடுப்பாய் facebook இல போட்டு சும்மா நாலு வரி  எழுதுவாய் அவளவுதான். ஒரு பக்கம் ஒண்டு வச்சிருகிராய் இப்ப அதக் கவனிக்க உனக்குப் பஞ்சி என்னடா என்று கேட்கிறாள் . நீங்கள் தொடங்கிப் போட்டு அரைகுறை உடையோட நிக்கிறதப் போல என்னை நிப்பாட்டி வச்சிருக்க, ஏன் உந்த வடிவான காசுள்ள பிள்ளைய இன்னும் ஒருத்தருக்கும் கட்டிக் குடுக்கலை? வேற ஈதும் சிக்கலோ எண்டு கேட்கிற மாதிரி உங்கட நிர்வாகத்தையும் கேட்கப் போறாங்கள் எண்டு சொன்னது போல இருந்தது கடைசியா படம் எடுத்தப்ப.  

வளர வளரப் படம் எடுத்து அழகு பார்த்த நாங்கள் வளாந்தாப் பிறகு கணக்கில எடுக்காம இருக்கிறது உண்மையா வடிவா இல்லை. .
கடைசியா சொல்றன் ஒரு contractor ஒருத்தனிட்ட என்ன விடுங்கோ. கால எல்லை ஒண்டை குடுங்கோ. அதுக்குள்ளே முடிக்காமல் விட்டால் ஒவ்வொரு நாள் பிந்திறதுக்கும்  ஒரு பொருத்தமான தொகையை களிக்கிறது எண்ட மாதிரி செய்தா நல்லம். இல்லாட்டி உங்களால ஏலாது. எத்தினை நாளுக்கு மேசன் வீட்டை விடிய போய்க் காவல் நிக்கிறது. அதுக்குள்ளே சன்னல் நிலையை ஓடர் குடுங்கோ. காசை வச்சுக் கொண்டு என்ன வட்டியையே பெருக்கிறீங்கள்? கடைசியா கனவில வந்து சொன்னது இப்பிடித்தான் .


Friday 8 July 2011

ம்

நானும் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவு போடக் கூடிய மன நிலையில் இருந்தேன் என்பது என்னைப் பற்றிய வியப்புகளை அதிகரித்திருக்கின்றன. இனிமேல் காதல் புலம்பல் பதிவுகளை எழுத மாட்டேன் என்று எழுதிய பின்பு எதையுமே எழுதக் கூடிய மன நிலை இல்லது போனது எழுத்து விசயத்தில் நான் 1 -1 =0 . இணையம் இல்லாவிட்டாலும் எங்கேயாவது தேடித் போய் எழுத வேண்டும் என்ற அந்த வெறி இல்லது போய்த்தான் இருக்கிறது. ஆக என்னாலேயே என்னை வரையறுக்க முடியாமல் போயிருக்கிறது. இதுக்கு மேலை எழுத மண்டைக்குள்ள ஒண்டுமே இல்லை 

"எதையுமே எழுத முடிவதில்லை 
எல்லாவற்றையும் உன்னுடன் பகிர்ந்து கொள்வதால் "