Thursday 31 December 2009
இந்தமுறையாவது நல்லதாய் மலர்வாய் புத்தாண்டே ....
சோகங்களை அளவின்றி வழங்கினாய்.
அதிர்ஷ்டம் இல்லாத இலக்கமோ ?
இல்லை அது தமிழருக்கு மட்டும்தான்.
எங்களால் உன்னை மன்னிக்க முடியாது.
பெருந்தன்மையோடு மன்னித்து வழியனுப்புகிறோம்.
சென்று வா .........
மனிதர்கள் செய்த தவறுக்கு நீ என்ன செய்குவாய்.
சென்று வா .........
உண்மையில் கோபப்பட வேண்டியவனிடம்
நாம் கோபப்பட முடியாது.
கோபப்பட்டால் சில வேளை உன்னுடனேயே நாங்களும்
பூவுலகுக்கு பிரியாவிடை கொடுக்க நேரிடலாம்.
சென்று வா.........
நாகரிகத்துக்காய் "சென்று வா "என சொல்லிவிட்டேன்.
நீ போ போய் விடு வராதே ........
உன்னைத் திட்டவும் பயமாய் இருக்கு.
அனுப்பி வைக்கும் உன் அயல் வீட்டுக்காரிக்காவது (2010)
உன்னுடைய பெயரால் (2009) தமிழருக்கு நிகழ்ந்த அநீதிகளை கூறு .
இன்னும் ஒரு கொஞ்ச நேரந்தான்
வடிவா அவளுக்கு விளங்கப்படுத்து.
வர ஆயத்தமாகிறாள் போல எல்லாத்தையும் ஒன்று விடாமல் சொல்லு.
வரப் போகும் அவள் எங்களைப் பார்த்து,
முகத்தில் சோகம் தெரியவில்லையே எனக் கேட்பாள்.
"அவர்களுக்கு எல்லாமே பழகிப் போய்விட்டது"
என்ற உண்மையைக் கூறு.
சரி சரி வரப்போறாள் போல கிடக்கு
நீ போ ...
நான் அவளை வரவேற்க ஒரு வாழ்த்துப்பா தயார் செய்ய வேண்டும்
"இரண்டாயிரத்துப் பத்தே
சென்ற வருடம் கண்ணீர் எங்கள் சொத்தே
எல்லோருக்கும் பிடித்ததே ஒரு வகைப் பித்தே
ஆயினும் இன்முகத்தோடு வரவேற்கிறோம்
அனைத்தையும் மறந்து விட்டே
வாராய் வாராய் மகிழ்ச்சியை மட்டும் கொண்டு வாராய் "
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
Monday 28 December 2009
காமமும் காலச்சாரமும்
Wednesday 9 December 2009
நுண் காலநிலை (Microclimate )
Saturday 5 December 2009
தெய்வீகக் காதல்
Friday 4 December 2009
A9 அவலங்கள்
Tuesday 13 October 2009
அப்ப வரட்டே.
இடத்தை பிடிக்கோணும்
இல்லாட்டி கீழை இருந்துதான்
தீபாவளி எண்டபடியால் நல்ல சனம் என்ன ?????
ஏறடா ஏறடா ரெஜின் ..........
ரகு எங்கை நிக்கிறாய் ????
இஞ்சி கடைசிப் பெட்டிக்கு கிட்டகெதியா வாடா ....
சுரேஷ் எங்கடா ??
ஆரோடையோ போனில கதைக்கிறாண்டா .
சனியன் திருந்தாது .
சரி சரி வந்திட்டன் வந்திட்டன்.
பராஜ் ஆக்களுக்கு சீற் கிடைக்கல்லை....
ஆடிக் கொண்டு நிண்டவங்கள்
கீழை இருந்து வரட்டும் .......மதி
எங்க போனாலும் சிலோதாண்டா அவன் ... கஜன்
குமணன் வந்தால் ஆருக்கும் சீர்கிடைக்காமல் போகும் ...
பிந்தி ஏறீற்று பராஜ் சொன்ன நியாயம்.
......
.................
...............
என்ன அப்பிடிப் பாக்கிறீங்கள் ? வேறை ஒண்டும் இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு (யாழ்ப்பாணம்) செல்கிறேன் . இதன் காரணமாக பதிவுலகத்தை விட்டு ஒருமாதம் தூரத்தில் இருக்கப் போகிறேன்.
சரி போட்டுவாறன் எல்லாருக்கும். வந்து சந்திக்கிறன் . அப்ப வரட்டே ........
Saturday 10 October 2009
ஏமாற்றினால்.....
நீ, நான், காதல் ????
உனது சைக்கிளை தோழி வீட்டில் விட்டுவிட்டு
என்னோடு டபுள்ஸ் வரும் காதல் மீதான அக்கறை ,
என் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருக்கும் நீ,
நான் செய்யும் சில்மிஷங்களை எதிர்க்கின்ற வெட்கம் ,
கைகோர்த்து காலாறும் நகர சபைப்பூங்கா,
கொப்பரைக் கொண்டுவிட்டு ஒழித்த குளக்கட்டு,
"நம் காதலை வீட்டில் சொல்லப்போறன்" என
பீதியைக்கிளப்பும் உன் குறும்பு ,
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தே
மௌனத்திலேயே கழிந்துவிட்ட பொழுதுகள் ,
இதிலே
எதுவுமே நடக்கவில்லை
இவையெல்லாம் கற்பனையிலும் கனவிலும்
வந்து போகும் எதிர்பார்ப்புக்களாய் போனாலும் .........................
உனக்கு சாப்பாடு பரிமாறியபோதில் இடம்பெற்ற முதல் உரையாடல்,
எங்கு போனாலும் உனது வீட்டடியால் அமைத்துக்கொண்ட என் பயணங்கள் ,
உன் அக்காவின் திருமணத்தில்
நான் நிற்கும் புகைப்படத்தில் நீயும் ஒருத்தியாய் ,
முடிவு கேட்டபோது நடந்தேறிய வினோதம்,
அதன் பின்னர் என்னை முறைத்த உன் பார்வை .
போன்ற நிஜங்களால் மனது நிம்மதியாய் ..........
உருகி உருகிக் காதலித்து நான் உருக்குலைந்து போகாவிட்டாலும்
சில நினைவுகள் கொஞ்சம் ஏக்கத்தைத்தர மறுக்கவில்லை.
நான் உன்னவன் என்று நீ எண்ணுமளவுக்கு எதுவுமே நடக்கவில்லை
அதே போல் நீ என்னவள் என்று சொல்லுமளவுக்கு
என்னுடைய சொத்தாகிப்போன வலைப்பதிவின்
கடவுச்சொல்லாய் உன்பெயர் .............
Tuesday 6 October 2009
சக்தி SUPERSTAR SEASON 3 ஒரு பார்வை
10 000 பேர் கொண்ட முதலாவது சுற்றிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாம் சுற்றிற்கு அனுப்பப்பட்டு மூன்றாம் சுற்று 100 பேராக சுருக்கப்பட்டு போய்க்கொண்டிருக்கிறது.முதலாம் இரண்டாம் சுற்றுகளில் தேர்வாகாத போட்டியாளர்களில் மாற்றக்கருத்துக்களை பகிர்ந்துகொண்டோரின் கருத்துக்களையும் ஒலி, ஓளி பரப்பி நிகழ்ச்சியை பார்க்காமல் கேட்காமல் இருந்தவர்களையும் பார்க்க வைக்க சக்தி நல்ல யுக்தியைக் கையாண்டது. நடுவர்களை கடுமையாக சாடினார்கள் அந்தப் போட்டியாளர்கள். ஒரு ரசிகனாக போட்டியை ரசித்ததில் நடுவர்கள் எந்தப் பிழையான தீர்ப்பையும் வழங்கியதாக எனக்குத் தோன்றவில்லை.பாடகர்களை அவர்கள் தெரிவு செய்யும் விதமும் கூறிய அறிவுரைகளும் அவர்களின் திறமையையும் நல்ல நடுநிலைமையையும் உணர்த்தியது. தேர்வாகாத போட்டியாளர்கள் சிலபேரின் வார்த்தைகளில் காணப்பட்ட அமிலம் சற்றுக் கூச வைத்தது. இந்த வார்த்தைகளுக்கு சிலர் கைதட்டி உற்சாகமும் அளிக்கிறார்கள். பெண்களை நடுவர்கள் உடனே தெரிவு செய்கிறார்கள் என்ற விடயம் மாற்றுக்கருத்துடையோரின் கருத்துகளில் பெரும்பான்மையாகத் தொனித்தது. நன்றாகப் பாடிய எவரையும் நடுவர்கள் தேர்வு செய்யாது விட்டதாக ரசிகர்களாகிய எமக்கே புரிகிறது . ஆனால் போட்டியாளர்கள் ?????
நல்ல கலைஞனாக ஒருவன் உருவெடுக்க வேண்டுமெனின் சுய மதிப்பீடு என்ற விடயம் நன்றாக வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். முடிவுகளை ஏற்றுக்கொள்ளல் ஏற்காது என்பது இரண்டாம் பட்சம், முதலில் தன்னுடைய பிழைகளை மற்றவர்களைவிட முன்பதாக அடையாளம் காணப் பழகவேண்டும். இசை என்கிற உன்னத கலையை வெளிப்படுத்த வந்தவர்கள் நல்ல பண்புகள் இல்லாதவர்கள் ஆகின்றபோது அவர்களுடைய இசை கூட கணக்கில்லாமல் போய்விடும். கலைஞர்கள் புரிந்து கொள்ளுங்கள். நாகரிகத்தைப் பேணுங்கள். ஆனால் இந்த சிக்கல்கள் இனிவரும் சுற்றுக்களில் இடம் பெற சாத்தியகூறுகள் குறைவு போலத்தான் தெரிகிறது.
100 பேர் கொண்ட பிரமாண்டமான சுற்றில் .........
மூன்றாம் சுற்றில் பாடகர்கள் பின்னணி இசையோடு பாடல்களை பாடுகின்றனர். நண்பர்களோடு நிகழ்ச்சியைக் கேட்கின்றபோது "இந்தியாவில் என்ன மாதிரிப் பாடுறானுங்கள் இவங்கள் எங்கை ....." என்று அலுத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு மோசமாகப் பாடுகிறார்களா இலங்கைக் கலைஞர்கள் ? ஏன் இந்தத் தோற்றப்பாடு??
நன்றாக அவதானித்தால் பாடகர்களில் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. கோளாறு இருப்பது பின்னணி இசையில். கோளாறு என்பதற்காக அவர்கள் இசையைத் திறமையாக வழங்கவில்லை என கூறவில்லை. இசைக்கப்படும் பின்னணி இசை Original Backround Music ஐ ஒத்ததாக இல்லாதிருப்பதே இதற்குரிய காரணம் போல தோன்றுகிறது. இசைக்கு பொறுப்பானவர்கள் ரட்ணம் குழுவினர் என நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் அனைவரும் திறமையான கலைஞர்கள். வழங்கப்படும் பின்னணி இசை பாடகர்களின் சுருதி ,லயம் என்பவற்றைப் பேணுவதற்கு எனப் புரிகிறது. ஆனால் இந்த நிலைப்பாட்டை எல்லா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அத்தோடு சில பாடல்களுக்கு வழங்கப்படும் தாள வாத்தியமாக பொருத்தமில்லாத வாத்தியங்களைப் பாவிப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. ஒரு தடவை " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை " பாடலுக்கு கொங்கோ ட்ரம்ஸ் தாள வாத்தியமாக ஒலித்தது ஏற்றுக்கொள்ள முடியாத மன நிலையை ஏற்படுத்தியது.மேலும், வழமையாக இலங்கை இசைக் குழுக்களில் வீணையின் பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் தென்னிந்திய திரையிசையில் வீணை பல இடங்களில் கையாளப்படுகிறது. வீணையின் இசையை வேறு வாத்தியங்கள் மூலம் இசைக்க முற்படல் என்பது பனை மரத்தில் தேங்காய் பறிக்க நினைப்பதற்கு ஒப்பானது என்பது உண்மை. புல்லாங்குழல் வீணை போற வாத்தியங்களை பயன்படுத்துங்கள்.
அகவே இவ்வாறான சில விடயங்களை இசைக்குழுவினர் கருத்திற் கொண்டால் சக்தி SUPER STAR உலக அளவில நல்ல வரவேற்பைப் பெறலாம்
Saturday 3 October 2009
இலங்கை நில அளவைத் திணைக்களமும் தியத்தலாவைப் பயிற்சிக் காலமும்.
திட்டப் படம் (plan) ஒன்றை கையால் வரையும் பயிற்சியை வழங்கி பட்டப் படிப்பு முடித்தோருக்கு ABCD எழுத கற்றுக் கொடுக்கிறார்கள். தொழில் நுட்ப கணணி வளர்ச்சியில் நில அளவைத்தினைக்களம் எத்தனையோ வருடங்கள் பின்னே நிற்கிறது. நில அளவைத் துறையை கற்காதவர்களுக்கே இவ்விடயம் சிரிப்பாக இருக்கும். எத்தனை மென்பொருள்கள் எத்தனை புதிய சிந்தனைகள் வளர்ச்சியடைந்த இக் காலத்தில் பாரம்பரிய முறைகளை பேண நினைப்பது எவ்வளவு மோட்டுத் தனமானது. நில அளவைத் திணைக்கள உயர் அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்து திணைக்களத்தை நவீன மயப் படுத்தாவிடின் இலங்கையில் நில அளவையாளராக பணி புரிய யாருமே முன்வரமாட்டார்கள் .
Friday 25 September 2009
உலகை ஆளும் GIS - பகுதி 1
GIS - Geographical Information System -புவியியல் தகவல் முறைமைகள்
புவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை கையாள்வதற்குரிய கணணி மயப்படுத்தப் பட்ட ஒரு முறைமை என்று கூறலாம். புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க சேகரித்தல் (Data collection) , சேமித்தல்(save) , பகுத்தாய்தல்(Analyize), மேலாண்மை(Management) செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை .ஆகும் ஒரு வரைபடம் (map) மூலம் குறிப்பிட்ட தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் GIS என்பது ஒரு பலநோக்குக் கொண்ட ஒரு தொகுதியாகும். (multypurpose). முக்கியமாக பகுத்தாய்தல் எனும் தேவைப்பாட்டை நிறைவேற்ற சிறப்பான ஒரு தொகுதி GIS இற்கு நிகர் எதுவும் இல்லை.புவியியல் தகவல்கள் தொடர்பான ஆய்வுகளில் GIS இன் பங்கு அளப்பரியது. மேலும் மருத்துவம் , பாதுகாப்பு, நகரத்திட்டமிடல் என்று இதன் வீச்சு மிகவும் பெரியது. GIS இனுடைய பாவனை பயன்பாடுகள் என்ன ?? என்பது பற்றி விரிவாக ஒரு பகுதயில் பேசுவோம். அதற்கு முன்பதாக அடிப்படை விடயங்களை முதலில்விளங்கிக் கொள்ளல் அவசியமானது .
தரவு (Data) , தகவல் (Information) இவையிரண்டுக்கும் இடையேயான வேறுபாடு என்ன ?? தரவுகள் எனப்படுபவை உள்ளீடு (input), தகவல் எனப்படுவது வெளியீடு (output) . தரவுகள் மூலம் எந்த முடிவுகளும் அணுக முடியாது. தகவல்கள் மூலமே முடிவுகள் எட்டப்படலாம். தகவல்களை உருவாக்குவதற்காக சேகரிக்கப் படுபவையே தரவுகள். தரவு ,தகவல் என்பது எல்லாத்துறையிலும் ஒரு முக்கியமாக இருப்பது போல GIS இலும் முக்கியமானது.
உதாரணம் :-
தரவு - ஒரு இடத்தை நில அளவை செய்து அதை ஒரு வரைபடமாக (plan/map) ஆக மாற்ற முதல் அதன் வடிவம். இதன் மூலம் ஒரு சாதாரண பயனாளரால் (user) எந்த விடயத்தையும் உணர முடியாது.
நில அளவை செய்யப் பட்டு வரைபடமாக மாற்ற முதல் அதன் வடிவம்.
தகவல் :- மேலே நில அளவை செய்யப்பட்ட இடத்தினுடைய வரைபடம்.(plan).
நிறைய எழுதி அலுக்கவைக்காமல் முதலாவது பதிவை சுருக்கமாக நிறைவு செய்கிறேன். இன்னும் GIS என்ற தலையங்கத்துக்குள் சரியாக புகவில்லை. தொடர்ந்து வரும் பதிவுகளில் நிறைய ஆராய்வோம். என்னுடைய இந்த புது முயற்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என பின்னூட்டத்தில் அவசியம் தெரிவிக்கவும்.
Sunday 20 September 2009
என்னைப் பாத்து எண்டாலும் திருந்துங்கோவன்
01) குடியை விட்டிட்டன் எண்டே சொல்லலாம்.
02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
03) சிகரெட்டை நிப்பாட்டியாச்சு.
04) Engilish improve பண்ணியாச்சு.
05) first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.
இப்பிடியெல்லாம் சாதிச்ச அடியேன் பெரிய ஒண்டும் .....................
௦6) பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.
Thursday 10 September 2009
சொல்லவே இல்லை
ஒரு விசயமும் இல்லை எழுத வேணும் என்பதற்காய் எழுதுகிற பதிவு இது.
சல் அடித்தல்
"கொஞ்ச நேரம் சல் அடிச்சுக் கொண்டிருந்தோம். "
இவ்வாறான வாக்கியப் பிரயோகங்களை அரிதாக எங்கேயும் கேட்டிருக்கலாம். அதென்ன சல் அடித்தல் ??
எதிர்ப் பாலாருடனான் உரையாடலையே(அரட்டை) சல் அடித்தல் என்று கூறப்படும். ஆண்கள் பெண்களோடு பேசும்போது வழிஞ்சு வழிஞ்சு கதைப்பார்கள். அதுதான் அதுதான் இந்த சமாச்சாரம். எதிர்ப்பாலாருடன் அரட்டை அடிக்கும்போது வாயில் எச்சில் அதிகமாக சுரக்குமாம். (பேசும்போது கவனியுங்கோ) அளவுக்கு அதிகமாக சல் அடித்தால் அது வாளி வைத்தல் என்ற பதத்தால் இன்று பல இடங்களில் வழங்கப் பட்டு வருகிறது.
விசிறி
Wednesday 2 September 2009
பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...
விதி முறைகள்.
1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.
2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.
3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.
மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.
நான் எழுத வந்த கதை
2008 இல்தான் வலைப்பதிவுகள் பற்றி அறிந்தேன். ஒரு முறை லோஷன் அண்ணாவின் பேட்டி ஒன்று இசை உலகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. இசை உலகம் சஞ்சிகையைத் தவறாது படிக்கும் பழக்கம் சிறிது காலம் இருந்தது. லோஷன் அண்ணாவின் பேட்டியில் அவருடைய இணையத்தள முகவரி ஒன்றும் கொடுக்கப் பட்டிருந்தது. இத் தளத்துக்கு உலாவி பல சுவரஸ்யமான விடயங்களை வாசிக்கக் கூடியதாக இருந்தது. இது பற்றி எனது சக மட்டத் தோழன் மைக்கலிடம் "லோஷன் இணையத்தளம் ஒன்று வைத்திருக்கிறார் பாத்தனியோ ??"எனக் கேட்டேன். மைக்கல் கணணி, இணையம் சம்பந்தமான விடயங்களில் ஒரு புலி. அது ஒரு இலவசத் தளம் நீ கூட வைத்திருக்கலாம் என்றான். கட்டுரைகள் எழுதுவதில் நாட்டமிருந்தமையால் எனக்கும் ஒன்று உருவாகித்தரச்சொல்லிக் கேட்டேன். வலைப் பதிவை உருவாக்கி எவ்வாறு பதிவிடுவது ,திரட்டிகள் என்று முழுக்க முழுக்கச் சொல்லித்தந்தது மைக்கல்தான். இப் பதிவில் அவனுக்கு நன்றிகள்.
எமது பல்கலைக் கழக கணணி ஆய்வு கூடம்தான் எங்கள் இணைய வாசஸ்தலம். இரவு 12.00 மணியிலிருந்து காலை 7.30 வரைதான் ஆய்வுகூடம் மூடியிருக்கும். வலைப்பதிவு ஒன்று வைத்திருப்பதால் அதிக நேரம் ஆய்வு கூடத்திலேயே செலவாகியது. ஆரம்பத்தில் நான் வைத்திருந்த http://panaiyooran.blogspot.com/ என்ற வலைப்பதிவு NTAMIL திரட்டியால் தாக்கிய வைரஸ் சிக்கலால் அழிந்துவிட்டது. பலருக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்ததை அறிந்தபின் இந்த வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டேன் . பின்பு பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் இணைக்கும் திரட்டிகளையே இணைத்துக் கொண்டேன்.
வலையுலகத்துக்கு வந்தபின் முதலில் எனக்குப் பதிவராக அறிமுகமாகியவன் தமிழன் கறுப்பி ஊர்த்தோழன். நல்ல கவிஞனாக இவனை எனக்குதெரியும் . அதற்குப்பின் பலரது அறிமுகங்கள் கிடைத்தன. இன்று நான் ஒரு வலைப்பதிவர் என பலகலைக் கழக நண்பர்கள் பலருக்குத் தெரியும் பனையூரான் என்று அழைப்பதும் இவனோட சில விசயங்கள் கதைக்கக் கூடாது பதிவில் போட்டுவிடுவான் எனவும் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட " இதை blog இலை போடுறதில்லை "போன்ற அரோக்கியமான நக்கல்களுடன் வலையுலகத்துக்கு வெளியே வாழ்க்கை நகர்கிறது.
எழுதியது எவ்வாறு ?
தமிழ் எழுத்துருவிலோ தட்டச்சு முறையிலோ தட்டச்சிட எனக்குத் தெரியாது. இன்றைய சூழலில் அந்தத் தேவையும் எனக்கு ஏற்படவில்லை. தெரிந்ததெல்லாம் amma அம்மாதான்.
விளையாட்டுக்கு அழைப்பது
இவரைப் பார்த்துத்தான் நான் பதிவுலத்திற்கு வந்தேன். இவரைப் பற்றி நான் அறிமுகம் தரத்தேவையில்லை. எங்கிருந்தாலும் ஆயத்தமாகுங்கள் அண்ணா.
நல்ல கவிஞன். வாசிப்பை உயிர் போல நேசிப்பவன். இப்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றான் . வாங்கோ தமிழன்.
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தொழில்நுட்பம் சம்பந்தமான நல்ல விடயங்களைத் தரக்கூடியவர். பல்கலைக்கழக வாழ்வுபற்றி இவரது சில பதிவுகள் நெஞ்சைத் தொட்டவை.
கவிதைகளால் வலைப்பதிவை அலங்கரிப்பவர். காத்திரமான விடயங்களையும் கவிதையில் பிரதிபலிப்பவர். நிலவில் ஒரு தேசத்தை உருவாக பாடுபடுபவர்.
பி.கு:- மூத்த பிரபல பதிவர்களையும் அழைக்கக் கிடைத்ததில் உண்மையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட பதிவாக தரமுடியவில்லை என்பது வருத்தம்தான் . இருப்பது இவ்வளவுதான் என்ன செய்வது?
இப்போது யாருடைய வலைப்பதிவையும் தொடர்வதற்காக என்னால் புகுபதிகை செய்ய முடியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் தெரியப் படுத்தவும்.
Friday 28 August 2009
ஒரு வலைப்பதிவராக.........
அப்பிடி என்ன பொறுப்பு ? சும்மா பீலா விடாதே . வந்தமா வாசிச்சமா எழுதினமா போனோமா எண்டு இல்லாம பொறுப்பு மண்ணாங்கட்டி எண்டெல்லாம் நீங்கள் திட்ட முதல் ஞாபகப்படுத்தி தயவு செய்து திட்ட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் வணக்கம்.
தொழில்நுட்பம் சம்பந்தமான வலைப்பதிவுகள் என்று பார்க்கும்போது கணிசமான வலைப் பதிவுகள் தமிழில் இருக்கின்றன. மேலும் அவை கணணி, மென்பொருள், இணையம் சம்பந்தமாக இருப்பது சந்தோசப் பட வேண்டிய விடயம். அத்துடன் கவலைப்பட வேண்டிய விடயமும் கூட. ஏனெனில் வேறு துறை சம்பந்தமாக உள்ள வலைப்பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது.
பொதுவாக துறை சார்ந்த வலைப்பதிவுகளின் குறைவுக்கு என்ன காரணமாக இருக்கலாம்???
கலை, நாட்டுநடப்பு, நகைச்சுவை, சுவாரஸ்யம் என்ற பாணியில் எழுதும் பதிவர்கள் பொதுவாக தங்களுடைய எண்ணங்கள் மற்றவர்களிடம் சென்று அதை அவர்கள் ரசிக்கும்போதே திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆனால் தொழில்நுட்பம் அறிவியல் ஈடுபாடுடையவர்களிடம் அவ்வாறான மனப்பாங்கு இருப்பதில்லை. தேடலில் ஆர்வமுள்ள இவர்கள் வெளியீடு பற்றி அவ்வளவாக சிந்திப்பதில்லை. இது ஒரு குறைபாடு என நான் கூற முனையவில்லை. ஒரு சாதாரண இயல்பு. குறித்த ஓர் துறை சார்ந்த விடயம் எல்லோருக்கும் புரியாது இருப்பதே இதற்குக் காரணமாகும்.
பல்வேறு துறை சார்பாக வலைப் பதிவுகள் தமிழில் உருவாக்குவது நிச்சயமாக ஓர் அரோக்கியமான சூழலை உருவாகும் என்பது உண்மை. இன்றைய உலகைப் பொறுத்த அளவில் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியே வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. அவ்வாறு வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கினால் அவர்களின் உயர்கல்வி தாய்மொழியிலேயே இருக்கும். தமிழிலே உயர்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படாமைக்கு போதுமான முதல்கள் எமது மொழியில் இல்லாமையே காரணமாகும். முதல்கள் (source) என கூறுவது அறிவு முதல்களான நூல்கள், இணையத்தளங்கள் என்பன. விஞ்ஞானம் அறிவியல் சம்பந்தமான தமிழ் மொழி நூல்களைப் பெற்றுக்கொள்ளுதல் எவ்வளவு கடினம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அவ்வாறு தமிழ் மொழியிலேயே அறிவியல் நூல்கள், இணையத்தளங்கள் உருவாக வேண்டுமெனின் முதற்கட்டமாக வலைப்பதிவுகள் உருவாக வேண்டும். ஆம் சகல துறைகளிலும் வலைப் பதிவுகள் உருவாக வேண்டும். இந்த ஆர்வம் அதிகரிக்கும் பட்சத்தில் தரமான அறிவியல் ரீதியான இணையத்தளங்கள், நூல்கள் தமிழிலே வெளிவரலாம். சிறிது கற்பனை செய்து பார்க்கையில் நடக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.
ஆங்கிலத்தில் புலமை பெற்று சிறந்த அறிவியல் விஞ்ஞான நூல்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் இயல்பு என்பது சகலருக்கும் கிட்டிவிடாது. ஒரு இனம் என்பதற்கு அப்பால் குறித்த ஒரு மொழியைப் பேசும் சமூகத்தின் சிந்தனை அறிவு, பொருளாதார வளர்ச்சியை தாய்மொழியிலான உயர்கல்வி உயர்த்தும் என்பது நடைமுறை உண்மை. இவ்வளவு பெரிய ஒரு விடயத்தை துறைசார் வலைப்பதிவுகளின் உருவாக்கம் ஏற்படுத்தும் என்பது எனது வாதம்.
அந்த வகையில் ..................நாம் எத்தனையோ ஒரு துறைசார்ந்த திறமையானவர்களை நண்பர்களாகக் கொண்டிருக்கலாம் . அவர்களுக்கு வலைப்பதிவு சார்ந்த நல்ல விடயங்களை தெரிவித்து அவர்களை ஓர் துறைசார் வலைப்பதிவராக உருவாக்க முயற்சித்தால் தமிழ் பேசும் மக்கள் அடையக்கூடிய நன்மைகள் பலவாக எதிர்காலத்தில் இருக்கலாம்.
பி.கு :- அளவுக்கு அதிகமா பெரிய தீர்க்கதரிசி மாதிரி அவித்துத் தள்ளியிருக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எதோ ஒரு வேகத்தில் ஆர்வத்தில் எழுதியதே இப்பதிவு. உறக்கமில்லா இரவொன்றில் உதித்த ஓர் யோசனை இது. தயவு செய்து திட்டி மாத்திரம் பின்னூட்டம் போட்டிடாதேங்கோ .
Monday 24 August 2009
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு - நெஞ்சில் நின்றவை
பிளாக்கர் 10 வது பிறந்தநாள்
***குட்டிப் பதிவர் யசீர். வியக்க வைத்த பதிவர்.
***நிகழ்ச்சியை livestream செய்வதில் முன்னின்று உழைத்து நல்ல ஒரு விடயத்தைச் செய்ததால் எல்லாராலும் பாராட்டப்பட்ட மது.
*** வார்த்தைப் பிரயோகங்களில் வட்டார வழக்குகள் பதிவுகளில் பாவிப்பது ஆரோக்கியமான விடயம் எனக் கூறப்பட்ட கருத்துக்கள் எல்லாராலும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது மிகவும் திருப்தியாக இருந்தது. இலங்கைத் தமிழை சில ஊடகங்கள் மறந்து கஷ்டப்பட்டு style tamil பேசுவது குறித்துக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மறந்துபோயும் சீரியஸா எதையும் பேசக்கூடாது என்ற கொள்கையோடு பேச்சுக்களில் சிரிப்பையூட்டி , நிகழ்ச்சிகளில் அடிக்கடி பின்னூட்டங்களிலும் தூள் கிளப்பினார் அண்ணன் புல்லட் .
இன்றைய நிகழ்ச்சி முழுக்க சிங்கம் என விழிக்கப் பட்ட இந்த சிங்கம்
குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும் அண்ணன் வந்தி
{
Wednesday 19 August 2009
அம்மாவிடம் ஒரு மன்னிப்பு
ஊரைவிட்டுப் பிரிந்தபின் கடவுள் எனும் விடயம் கேள்விக்குறியானது .
காரணம் கோவிலை விட்டுப் பிரிந்ததால் அல்ல
நடந்தேறிய அநியாயங்களாலும்
உலக ஒழுங்கில் மனிதனே எல்லாம் என்ற பட்டறிவாலும்
அம்மா தொலைபேசியில் பேசியபோது
மனதில் பட்டதை சொன்னேன்
" அப்பிடி சொல்லாதையடா அப்பு " என்றாள்.
இல்லை அப்பிடித்தான் என்றேன்.
சிறிது நேரத்தின் பின் என் தங்கை
" ஏன் உப்புடிக் கதைக்கிறாய்
அம்மா சரியாக் கவலைப்படுறா " என்றாள்.
திரும்பவும் அம்மாவோடு பேசினேன்.
" நான் சொன்னதை யோசிக்காதே
சும்மா வாய்க்குள்ள வந்ததைக் கதைத்திட்டன் "
அம்மா "ம் "
தங்கச்சி " உண்மையா உனக்கு நம்பிக்கை இல்லையோ ?"
"ம்."
" அம்மா எல்லே சரியா யோசிக்கிறா "
" நான் வீட்ட வந்தாப் பிறகு எதாவது விளங்கப்படுத்தி
நம்பிக்கையை வரப் பண்ணு "
" நம்பிக்கை இல்லாமப் போனா வாறது கஷ்டம்
எண்டு அம்மா சொல்லுறா "
அம்மா என்னை மன்னித்துவிடு
என் நம்பிக்கையீனம் என்னைப் பற்றி உன்னைக்
கவலைப்பட வைத்து விட்டது.
உனக்காக எனக்குள் நம்பிக்கையை வரவழைக்கப் பார்க்கிறேன்
முடியவில்லை மன்னித்துவிடு.
பி.கு:- வரிக்கு வரி வெட்டி எழுதியுள்ளதால் இது கவிதை எழுத வெளிக்கிட்டு சொதப்பியிருக்கிறான் என திட்டாதீங்கோ .இது தொலைபேசி உரையாடலை பெரும் பகுதியாகக் கொண்ட உண்மைச் சம்பவம்.
Saturday 15 August 2009
தமிழ் சினிமா செய்த பிழை ஒன்று
எழையாக நிம்மதியாக இருந்துவிட்டுப் போகலாம்தானே என்ற கருத்து இன்றைய உலகத்திற்கு எவ்வளவு தூரம் பொருத்தமற்றது எல்லோருக்கும் தெரியும். கவிதைஎழுதுவதற்கும், மேடைகளில் பேசி கைதட்டுப் பெறுவதற்கும் என்றால் இவ்வாறான தலைப்புக்கள் இனிப்பானதாய் இருக்கலாம்.(அன்றாட வாழ்க்கையில் பணத்தின் பங்கு பற்றி நான் இங்கு இம்சையடிப்பது போல இருக்கிறது. அதிகம் அலட்டவில்லை .)
காப்மேயர் "வெற்றிக்கான வழிமுறைகள் " எனும் நூலில் நான் எழையாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் அடிமனதில் எப்போதும் இருப்பதாலேயே ஏழை ஒருவன் இறுதிவரை ஏழையாகவே வாழ்கிறான் என்கிறார். மனம் போல்தான் வாழ்வு என்பது உண்மைதான்.
Tuesday 11 August 2009
அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பது எப்படி?
**அலுவலகத்தில் ஒரு நாளின் யாருடானான முதல் சந்திப்பாயினும் காலை வணக்கம் சொல்லத் தவறாதீர்கள்.
**சக மட்ட ஊழியர்களை (வயதில் அதிகமானோரையும் குறைந்தோரையும்)சகோதர உறவு முறை சொல்லி அழையுங்கள்.(அண்ணா,தம்பி ,அக்கா, ....)உங்களது வயதுக்காரரை பெயர் கூறி அழையுங்கள்.(முக்கியம்இவ்விரு தகவல்களும் உங்கள் சக ஊழியருடன் மாத்திரமே உயர்மட்ட அதிகாரிகளுடன் இல்லை)
**உங்களுக்கு கீழுள்ள ஊழியர்களை அவர் வயதில் அதிகமானவராக இருந்தாலும் அலுவலக நடைமுறை காரணமாக பெயர் கூறி அழைக்கும் நிர்ப்பந்தம் இருக்கலாம். அலுவலகத்தில் அதைப்பேணி அலுவலகத்திற்கு வெளியே அவரின் வயதிற்குரிய மதிப்பை அவசியம் கொடுங்கள்.
**கூட்டங்களில் உங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது "நான் நினைக்கிறேன் இவ்விடயத்தை இவ்வாறு செய்யலாம் " என்று கூறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நான் நினைக்கிறேன் என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள் . அப்படி உபயோகிக்கும்போது மற்றவர்களுக்கு நீங்கள் கர்வம் பிடித்தவர் போல ஒரு தோற்றப்பாடு ஏற்படும். எனவே " இந்த விடயத்தை இப்படி செய்தால் என்ன " என்ற பாணியில் உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
**அலுவலகம் சார்ந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும்போது அழைப்பை மேற்கொண்டவர் உடனடியாக பெயரை கூறாது பேச முற்படும்போது "நீங்கள் யார் பேசுகிறீர்கள் ?" என கேட்காதீர்கள். அது அவருக்கு முகத்தில் அடித்தது போல இருக்கும் . ஆறுதலாக "உங்கட பெயரைத் தெரிஞ்சு கொள்ளலாமா?" எனக்கேளுங்கள்.
**புன்னகையை எப்போதுமே அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி நிறைய இருக்கு சுலபமாகக் கடைப்பிடிக்கக் கூடிய இவ்வளவு விடயங்களுமே காணும் நல்ல பெயர் எடுக்க .
இதற்கு அப்புறமும் உங்கள யாரும் மதிக்கவில்லைஎண்டா பின்னூட்டம் மூலம் சொல்லுங்கோ .
Friday 7 August 2009
நான் ரசித்த ஹரிஷ்ஜெயராஜ்
Sunday 2 August 2009
பல்கலைக்கழக வாழ்வு
கடையிலையும் canteenலையும் சமைக்கிறதச் சாப்பிட்டு
விடிய சாப்பிட்டாப்ப்பிறகு தேத்தண்ணி குடிக்கப் பழகி
அண்டண்டை உடுப்புகளை அண்டண்டு தோய்க்காமல்
சேத்து வச்சு ஒருநாளில் உடுப்போடை சண்டைபிடிச்சு
நாள் தவறாமல் நெட் பார்த்து
facebook ஓடையும் blog ஓடையும் குடும்பம் நடத்தி
attendence க்காக lecture போய்
lecture நேரம் நக்கல் கவிதை எழுதி
study leave இல மாத்திரம் புத்தகம் தூக்கி
குப்பியால exam paas பண்ணி
party எண்டா யாருக்கும் பயப்படாம தண்ணியடிச்சு
தண்ணியடிச்சப் பிறகு சண்டை பிடிச்சு
அடுத்தநாள் அதை மறந்து
விடிய 6.30, 7 ௦௦மணி எண்டா எப்பிடியிருக்கும் எண்டு தெரியாம
களியுதம்மா campus வாழ்க்கை
Friday 31 July 2009
இன ஒற்றுமை என்பது இதுதானோ?
தமிழ் மாணவர்கள் தமிழ் மீது கொண்ட காதலால் "தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களுகிடையேயான இன ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்" என எழுதிவிட்டார்கள். தமிழ் வாசிக்கக்கூடிய சிங்கள மாணவர்கள் இம் மாற்றத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். சுவரொட்டி எழுதிய மாணவனை சிறிது நேரம் ஏசினார்கள். பின்பு தங்களே ஒழுங்கை தாங்கள் எழுதிக் கொடுத்தது போல் மாற்றினார்கள். சுவரொட்டி ஒட்டப்பட்டது.
பி.கு:- சிறுபான்மை இனங்களின் மனதை வெல்லவேண்டும் என்பதற்காக ஒட்டப்படும் சுவரொட்டியிலேயே பெரும்பான்மையினரின் குறுகிய மனப்பான்மை.
Thursday 30 July 2009
எப்போது செத்துப்போவேன்?
Tuesday 21 July 2009
அரசாங்கம்? அதிகாரிகள்? முதலாளிகள்? தொழிலாளிகள்? மக்கள் ?
தந்தையும் மகனுக்கு நன்றாக விளங்கப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் "இப்ப பார் அப்பு எங்கட வீட்டை எடுத்தால் உன்ட அம்மா இருக்கிறாதனே அவ அரசாங்கம் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்ளுவா. நான் முதலாளி காசு உழைக்கிறவன். நீ ஒரு அதிகாரி மாதிரி நீ சொல்லுறதைத்தான் அம்மா செய்வா.உன்ட தங்கச்சி மக்கள். எங்கடவீட்டு வேலைக்காரி இருக்கிறாள்தானே அவள் தொழிலாளி" என்று ஒரு விளக்கம் கொடுக்கிறார்.
Saturday 18 July 2009
வலைப்பதிவால் பணம் சம்பாதிக்கலாமா?
இணையத்தள முகவரி :- http://www.adsforindians.com/ads/index.asp
மேலும் ஒரு விளம்பர சேவை பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் blogspot இற்கு இச்சேவை தனது சேவையை அனுமதிக்கவில்லை. wordpress பதிவர்கள் பயன் அடைய முடியம்.
இணையத்தள முகவரி :-http://www.inlinks.com/
Friday 17 July 2009
நானும் 3,4 வரியில க(வி)தை எழுதுவமெண்டு...
"வைக்கவா?"-நான்
"வேண்டாம் "-நீ
நமக்கிடையேயான முதல் உரையாடலே முற்றும் கோணலாய்
என்போன்ற .......
கேலி
எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்
ஒருவன் மட்டும் மௌனமாய்
கேலியின் விளைவு
இணையத்தில்
உன்னிடம் வரக்கூடாது என உறுதியாக நினைக்கிறேன்
மின்னஞ்சல் பார்த்தபின் அவ்வாறு இருக்க முடியவில்லை
facebookஏ உன்னைத்தான்
இலங்கையில் ஊடகங்களின் நிலை ......
"தேவையில்லாம வாய்காட்டதே
மனுசரைச் சுடுவதுபோல சுட்டுபோடுவாங்கள் "
தாய் நாய் தன் குட்டியிடம்.
இறைவன்
Wednesday 15 July 2009
முகாம்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி செய்ய......
விரைந்து செயற்படுங்கள்
நன்றி