நினைவில் கனவாகி கனவில் நினைவாகி உயரில் புகுந்து உணர்வை வதைக்கின்ற உறவே ..............................
உன்னை வர்ணிக்கத் துடிக்குது மனசு
நீ .................
முகத்தில் வழிகின்ற கூந்தலில் ஊசலாடுது மனசு ஏனடி ஏன்??
தலை முடியை வாரி கட்ட உனக்கும் கொம்மாவைப் போல அலுப்போ ??
நெற்றியில் சிரிக்கின்ற பொட்டு வட்டமாய் இல்லாது நீளமாய் .....
வட்டம் வரையத் தெரியாமல் கோடு வரைந்த மொக்குப் பரம்பரைதானே உங்கட குடும்பம்.
கழுத்தில் மினுமினுக்கும் வியர்வைத் துளியிலே மேலும் சிறக்கின்ற அழகு
கிட்ட வர முடியல்லை, நீ கடைசியாக் குளிச்சது எப்ப ???
குட்டைப் பாவாடையில் மினுமினுக்குது உன் வாழைத்தண்டுக் கால்கள் ..
இழுத்து மூடடி வாழைத்தண்டிலே பூச்சி அரித்த கறுப்புப் புள்ளிகள்.
எதுக்கெடுத்தாலும் அம்மாவைக் கேட்கோணும் என கூறும் உன்னிலே அதிகரிக்கிற மரியாதை
உங்கட பரம்பரையில சொந்த புத்தி யாருக்குமே கிடையாதோ ???
பெண்களே மன்னியுங்கள் ..................