Friday 25 September 2009

உலகை ஆளும் GIS - பகுதி 1

GIS எனும் பதம் பல இடங்களில் பாவிக்கப் படுவதை இன்றைய நாட்களில் உணரமுடிகிறது. அது என்ன GIS ??? பலருக்குத் தெரிந்திருக்கலாம் .இருந்தாலும் ஒரு தொடராக இப்பதிவை எழுத இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே நகர்த்திச் செல்லாலாம் என இருக்கிறேன்.


GIS - Geographical Information System -புவியியல் தகவல் முறைமைகள்

புவியியல் தொடர்பான தகவல்களை தரவுகளை கையாள்வதற்குரிய கணணி மயப்படுத்தப் பட்ட ஒரு முறைமை என்று கூறலாம். புவியுடன் தொடர்பு குறிக்கத்தக்க சேகரித்தல் (Data collection) , சேமித்தல்(save) , பகுத்தாய்தல்(Analyize), மேலாண்மை(Management) செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முறைமை .ஆகும் ஒரு வரைபடம் (map) மூலம் குறிப்பிட்ட தகவல்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் GIS என்பது ஒரு பலநோக்குக் கொண்ட ஒரு தொகுதியாகும். (multypurpose). முக்கியமாக பகுத்தாய்தல் எனும் தேவைப்பாட்டை நிறைவேற்ற சிறப்பான ஒரு தொகுதி GIS இற்கு நிகர் எதுவும் இல்லை.புவியியல் தகவல்கள் தொடர்பான ஆய்வுகளில் GIS இன் பங்கு அளப்பரியது. மேலும் மருத்துவம் , பாதுகாப்பு, நகரத்திட்டமிடல் என்று இதன் வீச்சு மிகவும் பெரியது. GIS இனுடைய பாவனை பயன்பாடுகள் என்ன ?? என்பது பற்றி விரிவாக ஒரு பகுதயில் பேசுவோம். அதற்கு முன்பதாக அடிப்படை விடயங்களை முதலில்விளங்கிக் கொள்ளல் அவசியமானது .




தரவு (Data) , தகவல் (Information) இவையிரண்டுக்கும் இடையேயான வேறுபாடு என்ன ?? தரவுகள் எனப்படுபவை உள்ளீடு (input), தகவல் எனப்படுவது வெளியீடு (output) . தரவுகள் மூலம் எந்த முடிவுகளும் அணுக முடியாது. தகவல்கள் மூலமே முடிவுகள் எட்டப்படலாம். தகவல்களை உருவாக்குவதற்காக சேகரிக்கப் படுபவையே தரவுகள். தரவு ,தகவல் என்பது எல்லாத்துறையிலும் ஒரு முக்கியமாக இருப்பது போல GIS இலும் முக்கியமானது.



உதாரணம் :-

தரவு - ஒரு இடத்தை நில அளவை செய்து அதை ஒரு வரைபடமாக (plan/map) ஆக மாற்ற முதல் அதன் வடிவம். இதன் மூலம் ஒரு சாதாரண பயனாளரால் (user) எந்த விடயத்தையும் உணர முடியாது.


நில அளவை செய்யப் பட்டு வரைபடமாக மாற்ற முதல் அதன் வடிவம்.




தகவல் :- மேலே நில அளவை செய்யப்பட்ட இடத்தினுடைய வரைபடம்.(plan).



நிறைய எழுதி அலுக்கவைக்காமல் முதலாவது பதிவை சுருக்கமாக நிறைவு செய்கிறேன். இன்னும் GIS என்ற தலையங்கத்துக்குள் சரியாக புகவில்லை. தொடர்ந்து வரும் பதிவுகளில் நிறைய ஆராய்வோம். என்னுடைய இந்த புது முயற்சியை எவ்வாறு முன்னெடுத்து செல்ல வேண்டும் என பின்னூட்டத்தில் அவசியம் தெரிவிக்கவும்.

Sunday 20 September 2009

என்னைப் பாத்து எண்டாலும் திருந்துங்கோவன்

நிறைய கெட்ட பழக்க வழக்கங்கள் என்னிடம் இருந்தன. ஒன்றா இரண்டா ஊருப்பட்ட கெட்ட பழக்கங்கள். ஆனால் ஒரு மாதத்தில திருந்திவிட்டன். அதோட சில நல்ல பழக்கங்களையும் பழகிவிட்டன்.எப்பிடி திருந்தி இருக்கிறன் தெரியுமே?



01) குடியை விட்டிட்டன் எண்டே சொல்லலாம்.
02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
03) சிகரெட்டை நிப்பாட்டியாச்சு.
04) Engilish improve பண்ணியாச்சு.
05) first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.


இப்பிடியெல்லாம் சாதிச்ச அடியேன் பெரிய ஒண்டும் .....................


௦6) பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.









இதெல்லாம் ஒரு மாதத்தில எப்படி சாதிச்சான் எண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம் . நான் மட்டுமில்லை நீங்களும் சாதிக்கலாம்.
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>
>>



எப்பிடி இருந்த நான் இப்படி ஆனது இப்பிடித்தான் .
>>
>>
>>
>>
>>
>>
>>

01) குடியை விட்டிட்டன்.
சாராயம், பீர் எல்லாத்தையும் எண்ட வயித்துக்குள்ள விட்டிட்டன்.



02) குடிச்சிட்டு வீட்ட போவதில்லை.
குடிச்சா வீட்ட போறதில்லை , அதுக்காண்டி குடியை நிறுத்தவில்லை.



03) சிகரட்டை நிப்பாட்டியாச்சு.



04) English improve பண்ணியாச்சு.
கடைசியா நடந்த presentation ஒன்றில் எல்லா விரிவுரையாளர்களுக்கும் எனக்கு English எப்பவுமே impossible என்பதை prove பண்ணியாச்சு.
05)first கிளாஸ் அடிக்க முடியாமப் போச்சு ஆனால் second கிளாஸ் அடிக்கலாம் என்ற மட்டத்துக்கு வந்திட்டன்.
எல்லாரும் ஒண்டா இருந்து தண்ணி அடிக்கும்போது first கிளாஸ் (peg) chears சொல்லியடிப்பதால் first கிளாஸ் அடிக்கிறது நடக்காது ஆனால் இரண்டாவது ரவுண்டு அடிக்கும்போது செகண்ட் கிளாஸ் முதலாவது அடிப்பது நான்தான்.
06)பேரழகியான என்னவளோடு கைகோர்த்து நடப்பது பலருக்கு கண்கொள்ளாக் காட்சி. அப்பிடி ஒரு பொருத்தம்.
இப்படியெல்லாம் நான் வாழ்வதால் என்னவள் வேறொருவனுடன் கைகோர்த்து செல்வது கண்ணில் நீர் கொள்ளாக் காட்சி எனக்கு. கண்ணீர் கண்களில் கொள்ள முடியாமல் வழிகிறது .( கண்கொள்ளாக் காட்சி ).அவளுக்கும் அவனுக்கும் நல்ல பொருத்தம்
திந்துங்கோவன் என்னைப் பாத்து .......................

Thursday 10 September 2009

சொல்லவே இல்லை

பதிவு போட்டும் கனகாலம். .......


study leave வாட்டி எடுக்குது. (மற்ற நேரத்தில் புத்தகத்தைத் தூக்கினால் தானே ) பதிவுகள் வாசிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடிகிறது. எழுத முடியவில்லை. இண்டைக்கு நினைச்ச விஷயத்தை எழுதியே ஆகோணும் எண்டு நேரத்தை ஒரு மாதிரி ஒதுக்கியாச்சு.






ஒரு விசயமும் இல்லை எழுத வேணும் என்பதற்காய் எழுதுகிற பதிவு இது.

சல் அடித்தல்
"கொஞ்ச நேரம் சல் அடிச்சுக் கொண்டிருந்தோம். "
இவ்வாறான வாக்கியப் பிரயோகங்களை அரிதாக எங்கேயும் கேட்டிருக்கலாம். அதென்ன சல் அடித்தல் ??



salivia என்று ஒரு ஆங்கிலப் பதம் உள்ளது. உமிழ்நீர் என்று பொருள். salivia என்ற வார்த்தையின் சுருங்கிய வடிவமே sal. அது சரி, அப்ப எச்சிலுக்கும் கதைப்பதற்கும் என்ன சம்பந்தம்??

எதிர்ப் பாலாருடனான் உரையாடலையே(அரட்டை) சல் அடித்தல் என்று கூறப்படும். ஆண்கள் பெண்களோடு பேசும்போது வழிஞ்சு வழிஞ்சு கதைப்பார்கள். அதுதான் அதுதான் இந்த சமாச்சாரம். எதிர்ப்பாலாருடன் அரட்டை அடிக்கும்போது வாயில் எச்சில் அதிகமாக சுரக்குமாம். (பேசும்போது கவனியுங்கோ) அளவுக்கு அதிகமாக சல் அடித்தால் அது வாளி வைத்தல் என்ற பதத்தால் இன்று பல இடங்களில் வழங்கப் பட்டு வருகிறது.

(salacious என்றால் காமமுள்ள இச்சையுள்ள )

con அடித்தல்
con என்றால் எதிராக, மாறுபட்ட கருத்து தெரிவித்தல் , ஏட்டிக்குப் போட்டியாக என்று அர்த்தம். ஒரேபாலாருடன் அரட்டை அடிக்கும்போது விட்டுக்கொடுக்காமல் எதிராக போட்டியாக பேசுவது வழமை. ஆனால் எதிர்ப் பாலாருடனான அரட்டை அவ்வாறு இருப்பதில்லை. ஆண்கள் ஆண்களோடும் பெண்கள் பெண்களோடும் பேசிப் பேசி காலத்தை வீணாக்கும் உரையாடல்கள் con அடித்தல் எனப்படும்.



சல் அடித்தல் தமிழ் பேசும் மக்கள் சிறிய அளவில் பாவித்தாலும் con அடித்தல் பாவனையில் இல்லை என்றே கூறலாம். இப்பதம் தாம் படித்த காலத்தில் பாவனையில் இருந்தது என ஒரு ஆசிரியர் கூறியிருக்கிறார்.






விசிறி

fanatic என்றால் ஆர்வம் மிகுந்த அதிக அபிமானமுள்ள என்று பொருள். அதன் சுருங்கிய வடிவம்தான் fan.இப்போது ஆங்கில அகராதிகளில் fan என்றால் தீவிர அபிமானி என்று காணப் படுகிறது. நாங்கள் fan ஐ மொழிபெயர்த்து விசிறியாக்கிட்டம். முந்தி அரசர்மாருக்கு சாமரம் வீசினபடியால்தான் விசிறி என்ற சொல் வந்தது என்று மாத்திரம் சொல்லாதேங்கோ. பக்கத்தில் இருந்து சாமரம் வீசியவர்கள் சம்பளத்துக்கு வீசியவர்கள்.


எல்லோரிடமும் ஒரு கேள்வி ???? ????? ????? ?



I இற்கு அடுத்ததாய் is வரக்கூடியவாறு ஆங்கில வாக்கியம் ஒன்று அமையுங்கள் பார்ப்போம் .

Wednesday 2 September 2009

பதிவு எழுத வந்த கதை- தொடர் விளையாட்டு...

பால்குடி என்னட்டைக் கோலைத் தந்திட்டான் இவ்வளவு விரைவாகஎனக்கு வரும் எண்டு நினக்கல்லை.இதில என்ன புதினம் எண்டா பாடசாலைகளுக்கிடையேயான போட்டி போல என்னிடம் வந்த கோல் வந்தி, கீத், பால்குடி எண்ட கல்லூரி ஒழுங்கில் வந்திட்டுது. பதிவர்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில பால்குடியைப் பற்றி சொல்லியே ஆகோணும். ஒரு வார்த்தையில சொல்லுற தெண்டா இவன் ஒரு பெரிய மண்டைக்காய். விரிவா சொல்லுறதெண்டா ஒரு பதிவு காணும் எண்டு நினைக்கிறன். ஆனால் கொஞ்சம் நீளமான பதிவாய் இருக்கும். கீத் பல பதிவுகளில் இவனை பற்றி தொட்டுச் சென்றிருக்கிறான்.

மயூரன் அண்ணா தொடக்கி வைத்த இந்த விளையாட்டு உண்மையில் நல்ல ஆவணத்தகவல்களைத் தரக்கூடிய பெட்டகமாக அமையும் என்பது உண்மை . ஆனால் என் போன்ற ஆரம்பப் பதிவர்களிடம் வரும்போது சிற்சில இடங்களில் நாங்கள் நடந்து கொண்ட விதங்கள் சிரிப்பை வரவழைக்கலாம்.இருந்தாலும் ஒரு மனத்திருப்தி இருக்கிறது இவ்வாறான விடயங்களைப் பகிரும்போது .


விதி முறைகள்.

1. ஒவ்வொருவரும் தாம் வலைபதிய வந்த கதையை, இன்று வரையான தமது அனுபவங்களைச் சொல்ல வேண்டும்.

2. கதை சொல்லி முடிந்ததும் விளையாட்டுக்கு 4 பேரை அழைக்க வேண்டும். அழைப்பதோடு அழைக்கப்படும் நால்வருக்கும் அழைப்பினைத் தெரியப்படுத்தவும்.

3. கதை சொல்லுபவர்கள், தாம் தமிழை எழுதப் பயன்படுத்திய கருவிகள் தொழிநுட்பங்கள், சந்தித்த சிக்கல்களைச் சொல்லவேண்டும்.

மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் மேலும் விதிமுறைகள் ஆலோசனைகளின் பேரில் சேர்க்கப்படலாம்.

நான் எழுத வந்த கதை

2008 இல்தான் வலைப்பதிவுகள் பற்றி அறிந்தேன். ஒரு முறை லோஷன் அண்ணாவின் பேட்டி ஒன்று இசை உலகம் சஞ்சிகையில் வெளிவந்திருந்தது. இசை உலகம் சஞ்சிகையைத் தவறாது படிக்கும் பழக்கம் சிறிது காலம் இருந்தது. லோஷன் அண்ணாவின் பேட்டியில் அவருடைய இணையத்தள முகவரி ஒன்றும் கொடுக்கப் பட்டிருந்தது. இத் தளத்துக்கு உலாவி பல சுவரஸ்யமான விடயங்களை வாசிக்கக் கூடியதாக இருந்தது. இது பற்றி எனது சக மட்டத் தோழன் மைக்கலிடம் "லோஷன் இணையத்தளம் ஒன்று வைத்திருக்கிறார் பாத்தனியோ ??"எனக் கேட்டேன். மைக்கல் கணணி, இணையம் சம்பந்தமான விடயங்களில் ஒரு புலி. அது ஒரு இலவசத் தளம் நீ கூட வைத்திருக்கலாம் என்றான். கட்டுரைகள் எழுதுவதில் நாட்டமிருந்தமையால் எனக்கும் ஒன்று உருவாகித்தரச்சொல்லிக் கேட்டேன். வலைப் பதிவை உருவாக்கி எவ்வாறு பதிவிடுவது ,திரட்டிகள் என்று முழுக்க முழுக்கச் சொல்லித்தந்தது மைக்கல்தான். இப் பதிவில் அவனுக்கு நன்றிகள்.

எமது பல்கலைக் கழக கணணி ஆய்வு கூடம்தான் எங்கள் இணைய வாசஸ்தலம். இரவு 12.00 மணியிலிருந்து காலை 7.30 வரைதான் ஆய்வுகூடம் மூடியிருக்கும். வலைப்பதிவு ஒன்று வைத்திருப்பதால் அதிக நேரம் ஆய்வு கூடத்திலேயே செலவாகியது. ஆரம்பத்தில் நான் வைத்திருந்த http://panaiyooran.blogspot.com/ என்ற வலைப்பதிவு NTAMIL திரட்டியால் தாக்கிய வைரஸ் சிக்கலால் அழிந்துவிட்டது. பலருக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டிருந்ததை அறிந்தபின் இந்த வலைப்பதிவை உருவாக்கிக் கொண்டேன் . பின்பு பிரபல தொழில்நுட்ப பதிவர்கள் இணைக்கும் திரட்டிகளையே இணைத்துக் கொண்டேன்.

வலையுலகத்துக்கு வந்தபின் முதலில் எனக்குப் பதிவராக அறிமுகமாகியவன் தமிழன் கறுப்பி ஊர்த்தோழன். நல்ல கவிஞனாக இவனை எனக்குதெரியும் . அதற்குப்பின் பலரது அறிமுகங்கள் கிடைத்தன. இன்று நான் ஒரு வலைப்பதிவர் என பலகலைக் கழக நண்பர்கள் பலருக்குத் தெரியும் பனையூரான் என்று அழைப்பதும் இவனோட சில விசயங்கள் கதைக்கக் கூடாது பதிவில் போட்டுவிடுவான் எனவும் ஒரு புகைப்படம் எடுத்தால் கூட " இதை blog இலை போடுறதில்லை "போன்ற அரோக்கியமான நக்கல்களுடன் வலையுலகத்துக்கு வெளியே வாழ்க்கை நகர்கிறது.

எழுதியது எவ்வாறு ?

தமிழ் எழுத்துருவிலோ தட்டச்சு முறையிலோ தட்டச்சிட எனக்குத் தெரியாது. இன்றைய சூழலில் அந்தத் தேவையும் எனக்கு ஏற்படவில்லை. தெரிந்ததெல்லாம் amma அம்மாதான்.

விளையாட்டுக்கு அழைப்பது

லோஷன்

இவரைப் பார்த்துத்தான் நான் பதிவுலத்திற்கு வந்தேன். இவரைப் பற்றி நான் அறிமுகம் தரத்தேவையில்லை. எங்கிருந்தாலும் ஆயத்தமாகுங்கள் அண்ணா.

தமிழன் கறுப்பி

நல்ல கவிஞன். வாசிப்பை உயிர் போல நேசிப்பவன். இப்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றான் . வாங்கோ தமிழன்.

சுபாங்கன்

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தொழில்நுட்பம் சம்பந்தமான நல்ல விடயங்களைத் தரக்கூடியவர். பல்கலைக்கழக வாழ்வுபற்றி இவரது சில பதிவுகள் நெஞ்சைத் தொட்டவை.

யாழினி

கவிதைகளால் வலைப்பதிவை அலங்கரிப்பவர். காத்திரமான விடயங்களையும் கவிதையில் பிரதிபலிப்பவர். நிலவில் ஒரு தேசத்தை உருவாக பாடுபடுபவர்.

பி.கு:- மூத்த பிரபல பதிவர்களையும் அழைக்கக் கிடைத்ததில் உண்மையில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட பதிவாக தரமுடியவில்லை என்பது வருத்தம்தான் . இருப்பது இவ்வளவுதான் என்ன செய்வது?

இப்போது யாருடைய வலைப்பதிவையும் தொடர்வதற்காக என்னால் புகுபதிகை செய்ய முடியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் தெரியப் படுத்தவும்.